Saturday, August 30, 2014
கோவை, : மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படாமல் தொங்கலில் 13 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன.
கோவை மாநகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ஏறக்குறைய இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன விற்பனை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கோவை சிட்கோவில் துவங்கி, இருகூரில் முடியும் ரயில்பாதை மாநகரை இரண்டாக பிரிக்கிறது.கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்க 11 இடங்களில் ரயில்வே மேம்பாலம், 2 இடங்களில் ரயில்வே கீழ்பாலம் என மொத்தம் 13 பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், பணி துவக்கப்படவில்லை. இருகூர், நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, விளாங்குறிச்சி, லட்சுமி நகர், ஆவாரம்பாளையம், ரத்தினபுரி 7வது வீதி, தயிர் இட்டேரி, ஒண்டிப்புதூர் சுங்கம், வெள்ளலூர் என 11 ரயில்வே மேம்பாலம், 2 ரயில்வே கீழ்பாலம் பணி துவங்கப்படவில்லை.
பல இடங்களில், நில ஆர்ஜிதம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவில் வழக்கு நிலுவை, நில ஆர்ஜிதம், இழப்பீடு வழங்குவதில் தொய்வு போன்ற பல காரணங்களால் பாலம் கட்டும் பணி துவக்கப்படாமல் தொங்கலில் உள்ளது. இந்த சிக்கல்களை எல்லாம் களைந்தால் மட்டுமே பாலம் கட்டுமான பணியை துவக்கமுடியும், இதற்கு இன்னும் 5 ஆண்டுகூட பிடிக்கும் என மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுபற்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த திமுக ஆட்சி காலத்தில் வேகமாக நடந்து வந்த பணிகள் தற்போது மந்த நிலையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 3 ஆண்டு காலத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்கு நில ஆர்ஜிதம் போர்க்கால அடிப்படையில் செய்யப்படவில்லை.
அதனால்தான் இவ்வளவு இழுபறி நீடிக்கிறது. நிலஆர்ஜிதம், சிவில் வழக்கு, இழப்பீடு என அனைத்தையும் விரைவாக மேற்கொண்டு, பாலம் கட்டுமான பணியை துவக்கவேண்டும். அப்படி துவக்கினால்தான் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இல்லையேல், ஒவ்வொரு ஆண்டும் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும். சிக்கல் இன்னும் வலுக்கும்‘‘ எனக்கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment