Saturday, August 30, 2014
கோவை, : மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படாமல் தொங்கலில் 13 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன.
கோவை மாநகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ஏறக்குறைய இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன விற்பனை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கோவை சிட்கோவில் துவங்கி, இருகூரில் முடியும் ரயில்பாதை மாநகரை இரண்டாக பிரிக்கிறது.கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்க 11 இடங்களில் ரயில்வே மேம்பாலம், 2 இடங்களில் ரயில்வே கீழ்பாலம் என மொத்தம் 13 பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், பணி துவக்கப்படவில்லை. இருகூர், நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, விளாங்குறிச்சி, லட்சுமி நகர், ஆவாரம்பாளையம், ரத்தினபுரி 7வது வீதி, தயிர் இட்டேரி, ஒண்டிப்புதூர் சுங்கம், வெள்ளலூர் என 11 ரயில்வே மேம்பாலம், 2 ரயில்வே கீழ்பாலம் பணி துவங்கப்படவில்லை.
பல இடங்களில், நில ஆர்ஜிதம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவில் வழக்கு நிலுவை, நில ஆர்ஜிதம், இழப்பீடு வழங்குவதில் தொய்வு போன்ற பல காரணங்களால் பாலம் கட்டும் பணி துவக்கப்படாமல் தொங்கலில் உள்ளது. இந்த சிக்கல்களை எல்லாம் களைந்தால் மட்டுமே பாலம் கட்டுமான பணியை துவக்கமுடியும், இதற்கு இன்னும் 5 ஆண்டுகூட பிடிக்கும் என மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுபற்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த திமுக ஆட்சி காலத்தில் வேகமாக நடந்து வந்த பணிகள் தற்போது மந்த நிலையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 3 ஆண்டு காலத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்கு நில ஆர்ஜிதம் போர்க்கால அடிப்படையில் செய்யப்படவில்லை.
அதனால்தான் இவ்வளவு இழுபறி நீடிக்கிறது. நிலஆர்ஜிதம், சிவில் வழக்கு, இழப்பீடு என அனைத்தையும் விரைவாக மேற்கொண்டு, பாலம் கட்டுமான பணியை துவக்கவேண்டும். அப்படி துவக்கினால்தான் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இல்லையேல், ஒவ்வொரு ஆண்டும் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும். சிக்கல் இன்னும் வலுக்கும்‘‘ எனக்கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment