Saturday, August 30, 2014
திருச்சி தொழில் அதிபரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவர் சொந்தமாக வீடுகளுக்கு உள்அலங்கார வேலை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த இவருக்கு ரூ.20 லட்சம் தேவைப்பட்டது. இதற்காக திருச்சியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரை கோபாலகிருஷ்ணன் அணுகினார்.
அவர், திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த கருணாகரன்(60) என்பவர் மூலம், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதனின் மனைவி சிவகாமியை(62) அறிமுகம் செய்துவைத்தார். அப்போது, அவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி தரவேண்டும் என்றால் ரூ.3 லட்சம் கமிஷனாக வழங்கவேண்டும் என்று கூறினார். இதை நம்பிய கோபாலகிருஷ்ணன், ரூ.3 லட்சத்தை பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் சிவகாமியிடம் கொடுத்தார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் கோபாலகிருஷ்ணனுக்கு அவர்கள் கடன் பெற்று தரவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து அவர் சிவகாமியிடம் கேட்டபோது, ‘கடன் பெற்று தரமுடியாது. கொடுத்த பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் இதுபற்றி திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் சிவகாமி, பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் தவிர மேலும் 4 பேரிடம் இதுபோல் தலா ரூ.3 லட்சம் என்று மொத்தம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள பரமேஸ்வரி, தங்கவேல், சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment