Saturday, August 30, 2014
திருச்சி தொழில் அதிபரிடம் கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்த மூதாட்டி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 34). இவர் சொந்தமாக வீடுகளுக்கு உள்அலங்கார வேலை செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். தனது தொழிலை விரிவுபடுத்த இவருக்கு ரூ.20 லட்சம் தேவைப்பட்டது. இதற்காக திருச்சியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவரை கோபாலகிருஷ்ணன் அணுகினார்.
அவர், திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த கருணாகரன்(60) என்பவர் மூலம், திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த சாமிநாதனின் மனைவி சிவகாமியை(62) அறிமுகம் செய்துவைத்தார். அப்போது, அவர் மகளிர் சுயஉதவி குழு மூலம் ரூ.20 லட்சம் கடன் வாங்கி தரவேண்டும் என்றால் ரூ.3 லட்சம் கமிஷனாக வழங்கவேண்டும் என்று கூறினார். இதை நம்பிய கோபாலகிருஷ்ணன், ரூ.3 லட்சத்தை பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் சிவகாமியிடம் கொடுத்தார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் கோபாலகிருஷ்ணனுக்கு அவர்கள் கடன் பெற்று தரவில்லை எனத்தெரிகிறது. இதுகுறித்து அவர் சிவகாமியிடம் கேட்டபோது, ‘கடன் பெற்று தரமுடியாது. கொடுத்த பணத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் இதுபற்றி திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் சிவகாமி, பரமேஸ்வரி, கருணாகரன், தங்கவேல், சாமிநாதன் ஆகிய 5 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தார். விசாரணையில் கோபாலகிருஷ்ணன் தவிர மேலும் 4 பேரிடம் இதுபோல் தலா ரூ.3 லட்சம் என்று மொத்தம் ரூ.15 லட்சம் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சிவகாமி, கருணாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக தலைமறைவாக உள்ள பரமேஸ்வரி, தங்கவேல், சாமிநாதன் ஆகிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment