Saturday, August 30, 2014
ஊத்துக்குளியில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் மகேஷ்குமார் (வயது 35), இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். குன்னத்தூர் சத்தியாநகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா (35). இவர் வெல்டிங் தொழில்
ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று மதியம் மகேஷ்குமார், ராஜா ஆகிய இருவரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்ட தாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா மது பாட்டிலை எடுத்து உடைத்து மகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் மகேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜாவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்து போன மகேஷ்குமாருக்கு பிரியா (28) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment