Saturday, August 16, 2014
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நகர் மாவட்டக் காங்கிரஸார் 200 இடங்களில் தேசியக் கொடி ஏற்றினர்.
வெள்ளிக்கிழமை காலை, காமராஜர் சாலையில் உள்ள நகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
நகர் மாவட்டத் தலைவர் பி. சேதுராமன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மாநில பொதுச் செயலர் எம். பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர் காந்தி, மாநில துணைத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வி. குமரேசன், பி. ராஜாங்கம், எல். முருகேசன், நாஞ்சில் பால்ஜோசப், பொதுச் செயலர் எல். விஜயராகவன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் மைதீன் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள 21 வட்டக் கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு குழுக்களாகச் சென்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
100 வார்டுகளிலும் மொத்தம் 200 இடங்களில் தேசியக் கொடியேற்றி, லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை வழங்கினர். 4ஆவது வார்டில் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
ஜனதா தளம்: மதுரை மாநகர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், விளக்குத்தூண் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். கைத்தறிப் பிரிவுத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், இப்பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, புறநகர் மாவட்டத் தலைவர் கே. பாக்கியத் தேவர் மாலை அணிவித்தார். கட்சி நிர்வாகிகள் எஸ்.எம். செல்லப்பாண்டி, எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வர்த்தக சங்கங்கள்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில், அதன் தலைவர் என். ஜெகதீசன் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், செயலர் ஜே. ராஜமோகன், முன்னாள் தலைவர் எஸ். ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில், அதன் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வெள்ளிக்கிழமை காலை, காமராஜர் சாலையில் உள்ள நகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
நகர் மாவட்டத் தலைவர் பி. சேதுராமன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மாநில பொதுச் செயலர் எம். பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர் காந்தி, மாநில துணைத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வி. குமரேசன், பி. ராஜாங்கம், எல். முருகேசன், நாஞ்சில் பால்ஜோசப், பொதுச் செயலர் எல். விஜயராகவன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் மைதீன் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள 21 வட்டக் கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு குழுக்களாகச் சென்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
100 வார்டுகளிலும் மொத்தம் 200 இடங்களில் தேசியக் கொடியேற்றி, லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை வழங்கினர். 4ஆவது வார்டில் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
ஜனதா தளம்: மதுரை மாநகர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், விளக்குத்தூண் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். கைத்தறிப் பிரிவுத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், இப்பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, புறநகர் மாவட்டத் தலைவர் கே. பாக்கியத் தேவர் மாலை அணிவித்தார். கட்சி நிர்வாகிகள் எஸ்.எம். செல்லப்பாண்டி, எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வர்த்தக சங்கங்கள்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில், அதன் தலைவர் என். ஜெகதீசன் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், செயலர் ஜே. ராஜமோகன், முன்னாள் தலைவர் எஸ். ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில், அதன் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment