Saturday, August 16, 2014
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நகர் மாவட்டக் காங்கிரஸார் 200 இடங்களில் தேசியக் கொடி ஏற்றினர்.
வெள்ளிக்கிழமை காலை, காமராஜர் சாலையில் உள்ள நகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
நகர் மாவட்டத் தலைவர் பி. சேதுராமன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மாநில பொதுச் செயலர் எம். பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர் காந்தி, மாநில துணைத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வி. குமரேசன், பி. ராஜாங்கம், எல். முருகேசன், நாஞ்சில் பால்ஜோசப், பொதுச் செயலர் எல். விஜயராகவன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் மைதீன் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள 21 வட்டக் கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு குழுக்களாகச் சென்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
100 வார்டுகளிலும் மொத்தம் 200 இடங்களில் தேசியக் கொடியேற்றி, லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை வழங்கினர். 4ஆவது வார்டில் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
ஜனதா தளம்: மதுரை மாநகர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், விளக்குத்தூண் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். கைத்தறிப் பிரிவுத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், இப்பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, புறநகர் மாவட்டத் தலைவர் கே. பாக்கியத் தேவர் மாலை அணிவித்தார். கட்சி நிர்வாகிகள் எஸ்.எம். செல்லப்பாண்டி, எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வர்த்தக சங்கங்கள்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில், அதன் தலைவர் என். ஜெகதீசன் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், செயலர் ஜே. ராஜமோகன், முன்னாள் தலைவர் எஸ். ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில், அதன் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வெள்ளிக்கிழமை காலை, காமராஜர் சாலையில் உள்ள நகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
நகர் மாவட்டத் தலைவர் பி. சேதுராமன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ். ராம்பாபு, மாநில பொதுச் செயலர் எம். பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினர் காந்தி, மாநில துணைத் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ், மாவட்ட துணைத் தலைவர்கள் வி. குமரேசன், பி. ராஜாங்கம், எல். முருகேசன், நாஞ்சில் பால்ஜோசப், பொதுச் செயலர் எல். விஜயராகவன், சிறுபான்மை பிரிவுத் தலைவர் மைதீன் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையடுத்து, மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் உள்ள 21 வட்டக் கிளைகளில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு குழுக்களாகச் சென்று இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
100 வார்டுகளிலும் மொத்தம் 200 இடங்களில் தேசியக் கொடியேற்றி, லட்டு, ஜாங்கிரி போன்ற இனிப்புகளை வழங்கினர். 4ஆவது வார்டில் உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.
ஜனதா தளம்: மதுரை மாநகர் மாவட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், விளக்குத்தூண் பகுதியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மாநகர் மாவட்டத் தலைவர் ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தார். கைத்தறிப் பிரிவுத் தலைவர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் க.ஜான்மோசஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், இப்பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு, புறநகர் மாவட்டத் தலைவர் கே. பாக்கியத் தேவர் மாலை அணிவித்தார். கட்சி நிர்வாகிகள் எஸ்.எம். செல்லப்பாண்டி, எஸ். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வர்த்தக சங்கங்கள்: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில், அதன் தலைவர் என். ஜெகதீசன் தேசியக் கொடி ஏற்றினார். விழாவில், செயலர் ஜே. ராஜமோகன், முன்னாள் தலைவர் எஸ். ரத்தினவேலு உள்ளிட்ட நிர்வாகிகள், வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தில், அதன் தலைவர் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். விழாவில், சங்க நிர்வாகிகள், வர்த்தகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருச்சி 14.9.16 சபரிநாதன் 9443086297 தமிழர்களின் 200 கோடி சொத்துக்களை சு 10 றையாடிய கன்னட வெறியர்களை கண்டித்து...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment