Tuesday, August 26, 2014
தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா வரும் 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல்நாள் மாலை 6 மணிக்கு சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது.
அதன்பின் தினந்தோறும் காலை 6.30 மணிக்கும், 11 மணிக்கும் தமிழில் திருப்பலி, குணமளிக்கம் வழிபாடு, மதியம் 3 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 4 மணிக்கு தேர்பவனியும், 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், ஒப்புரவு அருட்சாதனமும், 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெறும். மேலும் மறையுரை கருத்துக்களும் வழங்கப்படுகிறது.
இதில் பங்கு தந்தைகள், ஆன்மீக குருக்கள் கலந்து கொள்கிறார்கள். இதன் முக்கிய விழா செப்டம்பர் 8–ந்தேதி (திங்கட்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப் பெருவிழா, இறைவார்த்தை சபை 139–வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 14–வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலை 4மணிக்கு நற்கருணை ஆராதனையும், 5 மணிக்கு முப்பெரும் விழாகூட்டுத் திருப்பலியும், இரவு 7மணிக்கு அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது. 9–ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 6.30 அன்னையின் திருக்கொடி இறக்கப்படுகிறது.
இதன் ஏற்பாடுகளை பங்கு தந்தை திருத்தல அதிபர் பிளேஸ்அடிகளார், திருத்தலநிர்வாகி ஆரோக்கியசாமி அடிகளார், உதவி பங்குதந்தை வளன்அடிகளார், ஆன்மீககுரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment