Monday, August 25, 2014

ஏழ்மையில் உள்ள முதியோர்களுக்கு சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதம் தோறும் கடந்த தி.மு.க., ஆட்சியில் ரூ.500 வழங்கப்பட்டது. 2011 ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் இத்தொகை ரூ ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து முதியோர் ,மற்றும் விதவைகள் அரசு சார்ந்த உதவி தொகைகளை பெற்று வந்தனர் .இந்நிலையில் உதவி தொகை பெற தகுதி இல்லாதவர்களின் பட்டியலை தயாரிக்க வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தி ஊராட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் அந்த பட்டியலை ஒட்டிய அதிகாரிகள் தகுதி வாய்ந்த பயனாளிகள் பலரையும் தகுதியற்ற பட்டியலில் சேர்த்து விட்டனர் .இதனால் அதிக ஆண்டுகளாக உதவி தொகை பெற்றவர்கள் கூட தங்களை பட்டியலில் இருந்து நீக்கியது ஏன் என தெரியாமல் உள்ளனர் .மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளிக்க வந்தனர் .அந்த மனுவையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பெற்றுக்கொண்டனர் .முதியோர் உதவி தொகைக்கு மட்டுமல்லாது விதவை உதவி தொகைக்கும் வேட்டு வைத்து விட்டனர் .போலியான பயனாளிகளை கண்டறிவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை .ஆனால் உண்மையான் பயனாளிகளை களை எடுக்க நினைப்பது வேதனைக்குரியது .அரசுக்கு பல கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது என்பதற்காக முதியோர்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாது .வருவாய் துறை அமைச்சரும் ,மாவட்ட ஆட்சியரும் இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment