Saturday, August 23, 2014
கோரிக்கை மனு
இதுகுறித்து தடப்பள்ளி–அரக்கன்கோட்டை–பவானி நதி பாசன விவசாயிகள் சங்க தலைவர் தளபதி தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
மாநில அளவில் 1,267 உள்வட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு உள்வட்டத்திற்கும் ஒரு நில அளவர்கள் (சர்வேயர்) நியமிக்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் 1,267 உள்வட்டத்திற்கு 800–க்கும் குறைவான நில அளவர்கள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய தாலுகாக்களில் மொத்தம் 35 உள்வட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் சுமார் 20 நில அளவர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.
நில அளவர்கள்
விவசாயிகளுடைய நிலம் சார்ந்த பிரச்சினைகள், நீர் வழித்தடங்களில் உள்ள பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. நில அளவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் நில அளவீடு பணிகளுக்கு விவசாயிகள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை நில அளவீடு (சர்வே) செய்து “அளவீடு கற்கள்“ நட வேண்டும். நில அளவீடு செய்வதற்கு புவியியல் தொழில்நுட்பம் (ஜி.பி.எஸ்.), சி.ஸ்டார் எனப்படும் தொழில்நுட்பம் என பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. புவியியல் தொழில்நுட்ப கருவிகள் ஈரோடு மாவட்ட நில அளவர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த முறையை பயன்படுத்தி நில அளவீட்டு பிரச்சினையை சரிசெய்ய வருவாய்த்துறை முயற்சி செய்ய வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நில அளவர்களின் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment