Saturday, August 09, 2014
திருப்பூர் ஆக 9: திருப்பூர் மாநகர காவல் ஆணையகரகம் தோற்றுவிக்கப்படும் முன்பு வரை ஏராளமான வழிப்பறி , திருட்டு கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக இருந்தன . அப்போது போலீஸ் பற்றாக்குறை இருந்ததே காரணமாகும் . திருப்பூர் மாநகருக்கு என்று தனியாக போலீஸ் கமிஷ்னர் 2 துணை கமிஷ்னர்கள் 4 உதவி கமிஷ்னர்கள் மற்றும் 1000 க்கும் மேற்ப்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர் . இந்நிலையில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநகர போலீஸ் துறையுடன் ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பு கைகோர்த்து உள்ளது . இதை தொடர்ந்து போலீஸ் கமிஷ்னர் சேஷசாய் நிருபர்களிடம் கூறும்போது 1600 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த திட்டமிட்டுள்ளோம் . இதற்காக ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொதுமக்கள் பங்களிப்புடன் நிதி திரட்டி வருகிறது . முதற்கட்டமாக செரீப் காலனியில் 55 கேமரா பொருத்தப்படும் இதன் கட்டுப்பாடு முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கேமரா இருக்கும் . பராமரிப்பு பணிகளை மட்டும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேற்கொள்ளும் . மாநகர பகுதியில் அணைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் . இதற்காக இதற்காக தனி அரசானை உள்ளது . கண்காணிப்பு கேமரா பொருத்தாத நிறுவனங்களில் உரிமத்தை ரத்து செய்து அவற்றை சீல் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது . என்றார் . இந்த நிகழ்ச்சியில் போது சி ஐ ஐ அமைப்பின் தலைவர் ராஜா சண்முகம் , காவல் ஆய்வாளர்கள் முரளி [நுண்ணறிவு பிரிவு ] நெல்சன் [திருப்பூர் தெற்கு ] ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார் , ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி , சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...

