Wednesday, August 27, 2014
திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக சுமார் 4500–க்கு மேல் குடி தண்ணீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
குடிதண்ணீர் 10 நாட்களுக்கு ஒருமுறை 15 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யும் போது ஒரு சிலர் அதிக சக்தி கொண்ட மின்மோட்டார்களைக் கொண்டு குடிதண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.
குடிப்பதற்கு மட்டும் வினியோகிக்கப்படும் குடிதண்ணீரை ஒரு சிலர் கழிவறை, மற்றும் வீடுகள் சுத்தம் செய்ய தங்களுடைய கார், பைக், வாகனங்களை கழுவுவதற்கு மின்மோட்டார் மூலம் எடுக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மேடான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் சீராக கிடைப்பதில்லை என கடந்த 3 வருடங்களாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வினியோகம் செய்யும் போது ஒரு சில வார்டுகளுக்கு மட்டும் சென்று சுமார் 80 மோட்டார்களை பறிமுதல் செய்தது. ஆனால் சின்னாளபட்டியில் 1000–க்கும் மேல் உள்ள வீடுகளில் மின்மோட்டார்களை வைத்து தண்ணீர் எடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் பாரபட்சம் இன்றி அனைத்து வார்டுகளுக்கும் சென்று மின்மோட்டார் மூலம் குடிதண்ணீர் உறிஞ்சுவதைக் கண்டுபிடித்து மின்மோட்டார்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
0 comments:
Post a Comment