Wednesday, August 27, 2014
மதுரை தெய்வநெறிக் கழகத்தில் திரிவேணி விழா 1–ந்தேதி தொடங்கி 8–ந்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
தனியார் வங்கியின் பெயரில் கூடுதலாக சில எழுத்துகளைச் சேர்த்துக் கொண்டு, போலி வங்கி நடத்திய 4 பேரை தருமபுரி குற்றப் பிரிவு காவல் துறையினர் திங...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
0 comments:
Post a Comment