Wednesday, August 27, 2014
மதுரை தெய்வநெறிக் கழகத்தில் திரிவேணி விழா 1–ந்தேதி தொடங்கி 8–ந்தேதி வரை நடக்கிறது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை தெய்வநெறிக் கழகம் மற்றும் சிவானந்த தபோவனத்தின் தலைவர் ஸ்ரீ சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–
குருதேவர் ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் 128–வது ஜெயந்தி விழா மதுரை தெய்வநெறி கழகத்தின் 76–வது ஆண்டுவிழா மற்றும் மதுரை சிவானந்த தபோவனத்தின் 47–வது ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா திரிவேணி விழாவாக செப்டம்பர் 1–ம் தேதிமுதல் 8–ம் தேதி வரை காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் உள்ள தெய்வநெறிக் கழகத்திலும், மாலையில் தினசரி 6 மணி முதல் சங்கீர்த்தன நிகழ்ச்சியும், 7 மணி முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் மீனாட்சி கோவில் வடக்காடி வீதி, திருவள்ளுவர் கழகத்திலும் நடைபெற உள்ளது.
1–ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரை, ஆல் இந்தியா ரேடியோ உதவி நிலைய இயக்குநர் அசோக் விழாவினை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன்பின்னர் தமிழகத்தின் தவப்புதல்வர் சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் பேராசிரியர் ஞான சம்பந்தன் சிறப்புரையும் மறுநாள் (2–ந்தேதி) மாலையில் ஞானியார் மரபில் சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
மாலையில் குரு மகிமையும்–நாம மகிமையும் என்ற தலைப்பில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் சிஷ்யர் ப்ரும்ம ஸ்ரீ ராமானுஜம் சிறப்புரையும், 4–ந்தேதி புட்டு திருவிழாவை முன்னிட்டு நடை சாத்தப்படுவதால் காலை நிகழ்ச்சி சொக்கப்ப நாயக்கன் தெரு, ரமண மந்திரத்திலும், மாலையில் மேலமாசி வீதி, மதனகோபால சுவாமி திருக்கோவிலில் பரணி போற்றும் பார் புகழ் சிவானந்தர் என்ற தலைப்பில் ராஜகோபால கனபாடிகள் சிறப்புரையும் நடக்கிறது.
5–ந்தேதி மாலையில் பத்தமடை தந்த பரமஞானி சுவாமி சிவானந்தன் என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் சிறப்புரையும், 6–ந்தேதி மாலையில் சன்மார்க்க தந்தை சுவாமி சிவானந்தர் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா சொற்பொழிவும், 7–ந்தேதி மாலையில் பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் சிந்தனை மன்றம் நடக்கிறது.
குருதேவர் சுவாமி சிவானந்தர் பெரிதும் வலியுறுத்துவது பக்தி நெறியையே என பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன், ரேவதி சுப்புலெட்சுமி ஆகியோரும் தொண்டு நெறியையே என பேராசிரியை விசாலாட்சி சுப்பிரமணியன், ராஜா ஆகியோரும் கருத்து கூறுகின்றனர்.
8–ந்தேதி மாலையில் சிறப்பு கலை நிகழ்ச்சியாக மதுரை ஸ்ரீ சத்குரு சங்கீத வித்யாலயம் இணை பேராசிரியை பாலா நந்தகுமார் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இணை ஆணையாளர் நடராஜன் பரிசுகள் வழங்குகிறார். மேற்கண்ட அனைத்து நாட்களிலும் காலையில் 6 மணிக்கு கீதைப்பாராயணமும், 7 மணிக்கு கைவல்ய நவநீதம் என்னும் தலைப்பில் தென்காசி ஜகத்குரு ஸ்ரீ வேதவியாச ஆசிரமம் தலைவர் பூஜ்ய ஸ்ரீ சுவாமி அநந்தானந்த சரஸ்வதி தொடர் விரிவுரையும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
மதுரையில் வீட்டை இடித்து விட்டு பள்ளம் தோண்டும் போது பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மக்க...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment