Friday, August 08, 2014
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைகோ இன்று பகல் 12 மணியளவில் சென்னையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோவளம் அருகே சென்றபோது வைகோவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் லேசான மயக்கமும் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு தனியார் மருத்துவமனைக்கு அவரது உதவியாளர் தகவல் தெரிவித்தார்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேன் புறப்பட்டு வந்தது. வைகோ சென்ற கார் கோவளம் சுங்கச்சாவடியில் நின்றது. அங்கு வந்த ஆம்புலன்சில் வைகோவை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்தனர். வைகோவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் பிரதீப் நாயர், ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ‘‘வைகோவின் உடலை பரிசோதித்ததில் குறைந்த ரத்த அழுத்தம் அவருக்கு இருந்தது. இரண்டு நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது'' என்று கூறியுள்ளனர்.
வைகோ திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தொண்டர்களிடம் பரவியது. ம.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடல் நலம் குறித்து கேட்டறிவதற்காக கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை முன்பு குவிந்தனர்.
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
