Wednesday, August 27, 2014
வாடிப்பட்டி பெரியாறு பிரதான கால்வாய் (பி.டி.4) பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கட்டக்குளம் ராமசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–
முல்லைபெரியாறு பாசன விவசாயிகள் பருவமழைகள் பொய்த்துபோனதால் விவசாயம் செய்ய முடியாமல் வேதனையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பெரியாறு அணையில் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்ததால் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பெரியாறு அணையில் தண்ணீர் 2 ஆயிரம் மில்லியன் கன அடி வந்தவுடன் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும், 4ஆயிரம் அடி வந்தவுடன் பேரனை முதல் கள்ளந்திரி வரை உள்ள இருபோக சாகுபடி நிலங்களுக்கும், 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒருபோக சாகுபடி நிலங்களுக்கும், 7 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் விரிவாக்க பகுதி நிலங்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பெரியாறுபாசன நீர் பங்கீட்டின் விதிமுறைகளாகவும் அதனை நடைமுறை படுத்தவும் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அந்த விதிமுறைப்படி தற்போது கம்பம் பகுதிக்கு அடுத்து பேரனை முதல் கள்ளந்திரி வரை இருபோக சாகுபடி ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீரை உடனே திறந்து விடவேண்டும். காரணம் கண்மாய் வசதியற்ற இப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் விவசாயத்தை செய்திட முடியும். 6 ஆயிரம் அடி தண்ணீர் வந்தவுடன் ஒரு போக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறந்தால் கண்மாய் வசதி கொண்ட அப்பகுதி விவசாயிகள் நீர் பற்றாக்குறையை தவிர்க்க முடியும். ஆனால் தற்போது 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தபின்பும் இதுவரை திறக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல் வேதனையை அதிக படுத்தி வருகிறது.
எனவே விவசாயிகளின் நலன் கருதி பெரியாறு அணையின் உரிமையை நிலைநாட்டிய தமிழக முதல்வர் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு நீர்பங்கீட்டிற்கு நீதிகிடைத்திட வைகை அணையிலிருந்து பேரணை முதல் கள்ளந்திரி வரை உள்ள பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறந்திட உத்தரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment