Wednesday, August 27, 2014
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை முதல் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...
0 comments:
Post a Comment