Wednesday, August 27, 2014
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையில் செவ்வாய்க்கிழமை முதல் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறை அமல்படுத்தப்பட்டது.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகராட்சி உள்வட்டச் சுற்றுச்சாலையை அகலப்படுத்தி, கணினி மூலம் வாகனக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஓராண்டுக்கு முன்பு உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்ட கட்டணம், கடன்தவணைத் தொகை செலுத்தியது போக, மீதமிருந்த சுமார் ரூ.22 கோடி நிதியில் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 5 சுங்கச்சாவடிகளில் மேற்கூரைகள் அமைத்தல் மற்றும் அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தும் பணிக்கே அந்தத் தொகை செலவிடப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் கணக்கு காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்தன. கணினி மூலம் கட்டண வசூல் நடைபெறாததால், தினமும் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இச்சாலையை மேம்படுத்தவும், அகலப்படுத்தி கணினி முறையில் வாகனக் கட்டண வசூலுக்கு தங்களது சாலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையினர் கடிதங்கள் எழுதியும், சாலையை மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைக்கவில்லை. அடிக்கடி சாலையில் விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையை அகலப்படுத்த ரூ.200 கோடி நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணியை நெடுஞ்சாலைத் துறையினர் மேற்கொள்ள இருப்பதாகவும், இச்சாலையை அத்துறையினரிடம் ஒப்படைத்து பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், சில நாள்களுக்கு முன்பு உள்வட்ட சுற்றுச் சாலையில் அவசர அவசரமாக கணினிகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை முதல் உள்வட்டச் சுற்றுச்சாலையிலுள்ள 5 சுங்கச் சாவடிகளிலும் கணினி மூலம் வாகனக் கட்டண வசூல் முறையை ஆணையாளர் சி.கதிரவன் முன்னிலையில் மேயர் விவி ராஜன்செல்லப்பா துவக்கி வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இப்பணி நடைபெற்றுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், நகரபொறியாளர் அ.மதுரம், உதவி ஆணையாளர்கள் பழனிச்சாமி, தேவதாஸ், பிஆர்ஓ சித்திரவேல் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment