Monday, August 25, 2014
உடுமலை, : உடுமலை இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவப்படும் விநாயகர் சிலைகளை அமராவதி ஆற்றில் கரைப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழா 29ம் தேதி நடக்க இருப்பதை முன்னிட்டு, அதை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தாசில்தார்கள் சைபுதீன், சண்முகவடிவேல், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் முத்துராமன் மற்றும் இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம், இந்து முன்னணி, ஜாபிசா பள்ளிவாசல், பீர்வீக பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ.குணசேகரன் பேசுகையில், விநாயகர் சிலைக்கு எவ்வித ரசாயன கலவையையும் பூசக்கூடாது, சிலை பாதுகாப்புக்கு 15 பேர் கொண்ட கமிட்டி அமைத்து எப்போதும் 5 பேர் பாதுகாப்பில் இருக்க வேண்டும். நிர்ணயித்த பாதையில் தான் விஜயதர்சன ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்.
மேலும், கூட்டத்தில் வரும் 31ம் தேதி உடுமலை குட்டைத்திடலில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக மடத்துக்குளம் எடுத்து சென்று அமராவதி ஆற்றில் கரைப்பது என இந்து மக்கள் கட்சி(அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம் ஆகிய கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், பிஏபி வாய்க்காலில் தற்போது தண்ணீர் இல்லை. மடத்துக்குளம் கொண்டு சென்று அமராவதியில் கரைப்பது கடினம். எனவே பிஏபி கால்வாயில் தண்ணீர் வந்ததும் உடுமலை, திருப்பூர், கொடுங்கியம் ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை அதில் கரைப்பது என்றும், அதுவரை சிலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறினர். இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ.குணசேகரன், திருப்பூரில் மாவட்ட கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். அதில் உங்கள் கோரிக்கையை வைக்கலாம் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment