Friday, August 29, 2014
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தச்சநல்லூரை சேர்ந்தவர் வருண் தேவன் (வயது 48). இவர் கோவை அருகேயுள்ள பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்தார். இவரது வீடு பல்லடம் – மங்களம் ரோட்டில் அம்மாபாளையத்தில் உள்ளது.
அலுவலக வேலையாக பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த வருண் தேவன் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
அம்மாபாளையம் பிரிவு அருகில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் வருண் தேவனின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த வருண் தேவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் வருண் தேவனை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனின்றி ஏட்டு வருண்தேவன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்ததும் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமண தாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பல்லடம் போலீசார் ஏட்டு வருண் தேவன் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் எது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
சென்னையில் மாபெரும் கூட்டம் ? புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நமக்கு அனுப்பிய அடுத்த வீடியோவில் கூறியிருப்பது. நேற்று நம...
-
திருப்பூர் : திருப்பூர் அருகே, மதுபோதையில் மனைவியை வெட்டிக்கொலை செய்ய முயன்ற கணவருக்கு, மகிளா கோர்ட்டில் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
0 comments:
Post a Comment