Saturday, October 18, 2014
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகம் அடைந்த அவர்கள் விடுதலையை கொண்டாடினார்கள். ஈரோட்டில் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் தலைமையில் அ.தி.மு.க. மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் முன்பு கூடினார்கள். அவர்கள் உற்சாக மிகுதியால் துள்ளிக்குதித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். மகளிர் அணியினர் சிலர் மகிழ்ச்சி காரணமாக மேயர் மல்லிகா பரமசிவத்தை சுமந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து அ.தி.மு.க.வினர் தங்கள் நேர்ச்சையை செலுத்தினார்கள். பெரிய மாரியம்மனுக்கு அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்தனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்து அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். தொண்டர்கள் அ.தி.மு.க. கொடிகளை கையில் ஏந்தி உற்சாகமாக `அம்மா வாழ்க` என்ற கோஷங்கள் எழுப்பினார்கள். சிலர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஈரோடு முனிசிபல்காலனி விநாயகர் கோவிலில் ஈரோடு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பு பூஜை செய்து 108 தேங்காய் உடைத்து நேர்ச்சைக்கடன் செலுத்தினார்கள்.வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலில் நகர அ.தி.மு.க. சார்பில் ஏராளமான அ.தி.மு.க.வினர் 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன்கோவில், கோட்டை பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சின்னமாரியம்மன் கோவில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில் என 5 கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, தலா 108 தேங்காய்கள் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை சார்பில் காளைமாடு சிலை பகுதியில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினார். வார்டு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் காளைமாடு சிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். ஈரோடு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியினர் சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
இந்த கொண்டாட்டங்களில் ஈரோடு மாநகர் ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி பி.பி.கே.பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.கே.பழனிச்சாமி, மண்டல தலைவர் காஞ்சனா பழனிச்சாமி, மாநகர் மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், காசிபாளையம் நகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கேபிள் ரமேஷ், வார்டு எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் டி.எஸ்.ஆர்.ராஜ்கிரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் டி.எஸ்.ஆர்.செந்தில்ராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment