Friday, August 29, 2014
ஈரோடு: அளவு குறைவாக, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து, ரேஷன் கடைகளில் எடையளவு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி திவ்யநாதன் தலைமையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தாகிர் அலி முன்னிலையில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில், கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருட்கள், அதிக விலைக்கு விற்கபடுகிறதா?. பொட்டல பொருட்கள் மீது விற்பனை குறிப்புகள் உள்ளதா?. தண்ணீர் பாக்கெட், குளிர் பானங்கள் குறித்த விலையில் விற்கப்படுகிறதா என, தினசரி மார்க்கெட், பொட்டலங்கள் தயார் செய்து அடைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பம்ப்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. விற்பனை குறிப்பு இல்லாத பொட்டல பொருட்கள், 35 கைப்பற்றப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய காலத்தில் மறு முத்திரையிடப்படாத எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, முத்திரையிடப்படாத மற்றும் மறுபரிசீலனை சான்றினை உரியவாறு வெளிக்காட்டப்படாத, 54 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அளவு குறைவு மற்றும் மறு பரிசீலனை சான்று, வெளி காட்டி வைக்கப்படாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெட்ரோல், டீஸல் மற்றும் மண்ணெண்ணெய் பம்ப்கள் ஆய்வு செய்து, அளவு குறைவாக விற்பனை செய்த, மூன்று நிறுவன பம்ப் நிறுத்தம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொட்டல பொருட்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், பொட்டலங்களில் தயாரிப்பாளர், பேக்கரி பெயர், முகவரி, கஸ்டமர் கேர் எண், தயாரிக்கப்பட்ட, பேக் செய்த மாதம், ஆண்டு, நிகர எடை, விற்பனை விலை, வரி உள்ளிட்ட விபர குறிப்புகள் அனைத்தும், பொட்டல பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். முத்திரையிடப்படும் எடை அளவைகள், காலம் தவறாது குறிப்பிட்ட காலத்துக்குள், மறு முத்திரையிட்டு, வணிகத்தில் பயன்படுத்த வேண்டும், என கேட்டு கொள்ளப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
0 comments:
Post a Comment