Monday, August 25, 2014
தினமும் பெற்றோரை வணங்கிய பின் தனது பணிகளைத் தொடங்குபவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாப் பெருமைகளும் வந்து சேரும் என, மதுரை காமராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி முதல்வர் எம். ராஜீயகொடி தெரிவித்தார்.
அழகர்கோவில் அருகிலுள்ள லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லூரியில் 16ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 329 மாணவ- மாணவியர்களுக்குப் பட்டம் வழங்கி அவர் மேலும் பேசியது:
பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தொழில்முனைவோர்களாக மாணவ, மாணவியர் வரவேண்டும். வேலைத் தேடி அலையும் நபராக இருக்கக் கூடாது. பறவைகள் அதிகாலையிலேயே நீண்ட தொலைவு பறந்து சென்று தங்களுக்குத் தேவையான இரையைப் பெற்று, இருப்பிடம் திரும்புகின்றன. அது போல், சிறந்த மாணவராக உருவாக பறவைகளைப் பார்த்து பழகிக் கொள்ளவேண்டும்.
மாணவர்கள் தினமும் தங்களது பெற்றோரை கடவுளாக நினைத்து வணங்கினால், வாழ்க்கையில் அனைத்து நலன்களையும் பெற்றுத் திகழலாம். அதேபோன்று, நமது தேசத்தையும் மதிக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
கல்லூரி நிறுவனத் தலைவர் டத்தோ டாக்டர் கே. மாதவன் தலைமை வகித்தார். லதா மாதவன் பாலிடெக்னிக் முதல்வர் தவமணி வரவேற்றார்.
கல்லூரியின் மின்னணுவியல் துறை மாணவர் எஸ். ஜலால் முதலிடத்தையும், வி. அருண்பாண்டி இரண்டாமிடத்தையும் மற்றும் இயந்திரவியல் துறையில் ஜெ. ஜெகன்நாத் பிரபு மூன்றாமிடத்தையும் பெற்றிருந்தனர். இம்மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
விழாவில், லதா மாதவன் கல்விக் குழும இயக்குநர் எஸ். சேதுபதி, பொறியியல் கல்லூரி முதல்வர் மாரிமுத்து, மெட்ரிக். பள்ளி முதல்வர் மணி சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டன
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment