Friday, August 15, 2014
அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், அந்தியூர் வட்டார வளமையம் சார்பில் ஆசிரிய –ஆசிரியைகளுக்கு தமிழ் படித்தல், எழுதுதல், திறன் வளர்த்தல், கற்பித்தல் பயிற்சி 4 நாட்கள் நடைபெற்றது. அந்தியூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுஜாதா தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன் கலந்து கொண்டு தமிழ்படித்தல் மற்றும் எழுதுதலில் உள்ள இடர்பாடுகளை குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றி கற்றுக்கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு குழுவிளையாட்டு மூலம் கலந்துரையாடுதல் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சியில் அந்தியூர், அத்தாணி, பிரம்மதேசம், பர்கூர், எண்ணமங்கலம், தேவர்மலை, செம்புளிச்சாம்பாளையம், நகலூர் உட்பட 33 பள்ளிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 300–க்கும் மேற்பட்ட ஆசிரிய –ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மக்களின் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...

0 comments:
Post a Comment