Friday, August 15, 2014
திருப்பூரில் நடைபெற்ற 68-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் கொடி ஏற்றி வைத்து ரூ.2.55 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 68-வது சுதந்திரதின விழா கொண்டாட்டம் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதனத்தில் இன்று காலை நடைபெற்றது.சரியாக 9.00 மணியளவில் மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தேசிய கொடியியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி காவல் துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்ட தியாகிகளை கௌரவித்தார்.சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை கலெக்டர், மாநகர காவல்துறை ஆணையாளர் ஆகியோர் பறக்க விட்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகர காவல் துறை யை சேர்ந்த 51 பேர் உள்ளிட்ட 92 காவலர்களுக்கு பதக்கங்களும், சிறப்பாக பணியாற்றிய 70 அரசு அலுவலர்களுக்கு நற்சன்றிதல்களும் வழங்கப்பட்டன.பின்னர் வீட்டு மனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண உதவி தொகை மற்றும் பசுமை வீடு, இந்திர நினைவு குடியிருப்புகள் உள்ளிட்ட வைகளுக்கு ரூ.2 கோடியே,54 லட்சத்து,58 ஆயிரத்து,833 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை 406 நபர்களுக்கு வழங்கினார்.
விழாவில் மாநகர காவல் ஆணையாளர் என்.எஸ்.சேஷாய், மாவட்ட கண்காணிப்பாளர் அமித்குமார் சிங், மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட வருவாய் அலுவலர் பாரி, திட்ட அலுவலர் திரவியம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், ஆர்.டி.ஓ.பழனிகுமார், தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாவட்ட கலெக்டர் கௌரவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
துபாயில், 23 வயதான இந்திய வாலிபருக்கு 6 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் பெயர் பி.ஜே. என்று மட்டும் வெளியிடப்பட்டது. விற்பனை பிரதிநி...








0 comments:
Post a Comment