Wednesday, September 03, 2014
தி்ருப்பூர் 22வது வார்டில் சிபிஎம் வேட்பாளர்
வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்ய உறுதி
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஆர்.வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்வதென 22வது வார்டு மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் உறுதியேற்கப்பட்டது.
22வது வார்டுக்கு உட்பட்ட ரங்கநாதபுரம் கே.எஸ்.கே.படிப்பகத்தில் செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர் கூட்டம் நடைபெற்றது. ரங்கநாதபுரம் சி.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் 22வது வார்டு வேட்பாளர் ஆர்.வேலுச்சாமியை அறிவித்து, இந்த தேர்தலின் அரசியல் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்றினார். மாநகரச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.முருகேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் இ.பி.ஜெயகிருஷ்ணன், மனோகரன் ஆகியோர் தேர்தல் பணி குறித்து உரையாற்றினர்.
உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்த வார்டின் மீது ஆளும்கட்சி மாநகராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்தி குப்பை அள்ளுவது, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். மக்களை ஏமாற்றி வாக்ககுளை வாங்கலாம் என ஆளும்கட்சியினர் பணபலத்துடன், இறுமாப்புடன் செயல்படுகின்றனர்.
அதேசமயம் இந்த வார்டு கம்யூனிஸ்ட் இயக்கம் பலம்மிக்க பகுதியாகும். அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் இந்த வார்டு மக்களுக்கு மிகவும் அறிமுகமான சின்னம். கடந்த பல உள்ளாட்சித் தேர்தல்களில் இந்த வார்டில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு அதிக அளவிலான வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
இந்த பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டம், கழிவுநீர் வெளியேற்றம், சாலை செப்பனிடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தேர்தலுக்கு முன்புவரை எதுவும் செய்யாமல் மாநகராட்சி முடங்கிக் கிடந்தபோது, பல்வேறு இயக்கங்களை நடத்தி பணிகளை செய்ய வைத்தது மார்க்சிஸ்ட் கட்சி. எனவே நாம் செய்த பணிகளை மக்களிடம் கொண்டு சென்று வீதிகள்தோறும், வீடு வீடாக மக்களைச் சந்தித்து இதைச் சொன்னாலே நாம் வெற்றி பெறுவது உறுதியாகிவிடும். எனவே செப்டம்பர் 18ம் தேதி வரை அனைத்து கட்சி உறுப்பினர்கள், ஊழியர்கள் ஓய்வின்றி தேர்தல் பணியாற்றி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.வேலுச்சாமியை வெற்றி பெறச் செய்வோம் என்று இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் 22வது வார்டுக்கு உட்பட்ட கட்சி ஊழியர்கள் முழுமையாகப் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment