Tuesday, September 09, 2014
உடுமலை, : கோவை, திருப்பூர் மாவட்ட பிஏபி 2ம் மண்டல பாசனத்துக்காக திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது, பருவமழை பொழிந்து அணைகள் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் முடிந்தது. இதை தொடர்ந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 60 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று காலை 9 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணை மதகுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், பொள்ளாச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், செல்லமுத்து, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.75 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது 2ம் மண்டல பாசனம் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த ஆகஸ்ட் மாதமே தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவமழை பொய்த்து பிஏபி அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததாலும், கான்டூர் கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடந்ததாலும் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
தற்போது, பருவமழை பொழிந்து அணைகள் நிரம்பி விட்டன. கான்டூர் கால்வாய் பராமரிப்பு பணியும் முடிந்தது. இதை தொடர்ந்து, பரம்பிக்குளம் அணையில் இருந்து கான்டூர் கால்வாயில் கடந்த 20ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. 60 அடி நீர்மட்டம் கொண்ட அணையில் தற்போது 56 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில், திருமூர்த்தி அணையில் இருந்து பிரதான கால்வாயில் நேற்று காலை 9 மணிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு அணை மதகுகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளர் இளங்கோவன், பொள்ளாச்சி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி செயற்பொறியாளர்கள் ஜெயசீலன், செல்லமுத்து, ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் பாபு மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் மூலம் சுமார் 94 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ...
-
திருப்பூர்,அக்.4- திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் காங்கயம் ரோடு, சி.டி.சி.டெப்போ அருகில் ...
-
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய...
-
திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு பகுதியில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வீடு வீடாகச் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் வீரபாண்டி கல்லாங்காடு ப...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...
-
மக்கள் முதல்வர் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபடும் நாளே அண்ணா தி.மு.க.விற்கு தீபாவளி திருநாள் ...

0 comments:
Post a Comment