Wednesday, September 17, 2014
முத்தூர் அருகே மு.வேலாயும்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஒரு செடியில் 40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு உருவாகியுள்ளது.
மரவள்ளி கிழங்கு செடி
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள் கடந்த 20 மாதங்களுக்கு முன்பு கரூரில் இருந்து கொண்டு வரப்பட்ட மரவள்ளி கிழங்கு குச்சியை பள்ளி வளாகத்தில் ஊன்றி வைத்து தினமும் நீர் பாய்ச்சி வந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு செடி சுமார் 7 அடிக்கு மேல் நன்கு வளர்ந்து விட்டது.
40 கிலோ எடை கொண்ட மரவள்ளி கிழங்கு
இந்த நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரிய–ஆசிரியைகள் இந்த மரவள்ளிகிழங்கு செடியை வெட்டிவிட்டு அடியில் தோண்டி பார்த்தபோது மரவள்ளி கிழங்கு நீண்டதாகவும், உருண்டையாகவும் மிகப்பெரிய ராட்சத அளவில் பெரிய கிழங்காக இருந்ததை கண்டு மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பள்ளியில் பயிலும் மாணவ–மாணவிகள், பெற்றோர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் நேரில் வந்து இந்த பெரிய மரவள்ளி கிழங்கை ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர். இந்த மரவள்ளி கிழங்கு சுமார் 40 கிலோ வரை எடை கொண்டதாக உள்ளது.
ஆச்சரியம் அளிக்கிறது
இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:– மரவள்ளிகிழங்கு கிழங்கு வகையை சேர்ந்ததாகும். இந்தியாவில் மரவள்ளிகிழங்கு நேரடியாக வேகவைத்த உணவுப்பொருளாகவும், ஜவ்வரிசி, பாயாசம், சிப்ஸ் மூலப்பொருட்கள் தயாரிப்பதற்கும் பயன்பட்டு வருகிறது. மரவள்ளி கிழங்கு இனிப்பு மற்றும் கசப்பு ஆகிய 2 வகைகளில் உள்ளது. மரவள்ளி கிழங்கின் உள்ளே இறுகிய நிலையில் வெண்மை நிறத்தில் மாவுப்பொருள் உள்ளது. மரவள்ளி கிழங்கு கால்நடை தீவனம், ஆல்கஹால் தயாரிப்பதற்கு உபரி மூலப்பொருளாக பயன்படுகிறது. மரவள்ளி கிழங்கு செடி 1 வருட பயிராகும். சாதாரணமாக மரவள்ளி கிழங்கு செடியை அறுவடை செய்யும்போது கிழங்கு ஒன்று 1 கிலோ முதல் 10 கிலோ வரை மட்டுமே எடை கொண்டதாக இருக்கும். இந்த அரசு பள்ளியில் ஒரு செடியில் உருவான மரவள்ளிகிழங்கு மிகப்பெரிய அளவில் அதிக எடை கொண்டதாக உருவாகியுள்ளது மிகுந்த ஆச்சரியம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment