Thursday, September 11, 2014
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும்.
வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை, புதுத்தோட்டம், அக்காமலை, மானாம்பள்ளி, குரங்குமுடி, சின்னக்கல்லார், நீரார் ஆகிய வனப்பகுதிகளில் சுமார் 150 இந்த வகை குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. ஆனை மலை புலிகள் காப்பகத்தில் 500 குரங்குகள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுத்தோட்டம் எஸ்டேட் மற்றும் அதனைச்சுற்றியுள்ள வனப் பகுதியில் மட்டும் 75–க் கும் மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் வாழ்ந்து வரும் குரங்குகள் வால்பாறை– பொள்ளாச்சி மெயின்ரோடு பகுதியில் இருக்கும் புதுத்தோட்டம் எஸ்டேட் ரோடு ஓர பகுதிகள், பி.ஏ.பி. காலனி குடியிருப்பு பகுதி, காமராஜ் நகர் பகுதி, துளசிங் நகர் பகுதி, மற்றும் வால்பாறை டவுன் பகுதிகளிலும் சுற்றித் திரிந்து வருகின்றன.
இந்த சிங்கவால் குரங்குகள் புதுத்தோட்டம் பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்ற பின் வீடுகளின் ஓடுகளை உடைத்தும் வீட்டு கூரைகளில் இருக்கும் இடைவெளிக்குள் புகுந்தும் வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது.
அவ்வாறு வீடுகளுக்குள் செல்லும் குரங்குகள் வீட்டிலிருக்கும் சாப்பாடு அரிசி, பருப்பு தக்காளி மற்றும் திண்பண்டங்களை எடுத்து சாப்பிடுவதோடு வீட்டிலிருக்கும் பொருட்களையும் உடைத்தெறிந்து விடுகின்றன. இதனால் புதுத்தோட்டம் பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு பொருட் செலவுகளும் ஏற்பட்டு வருகிறது.
நேற்று காலை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் வேலைக்கு சென்றிருந்த தனபால் என்பவரின் வீட்டுக்குள் கண்ணாடி ஓட்டை உடைத்து உள்ளே புகுந்த சிங்கவால் குரங்குகள் சமையலறையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்திவிட்டு வீட்டின் உள் அறையிலிருந்த துணி, தலையணைகள், கம்பளி ஆகிய அனைத்தையும் கிழித் தெறிந்தது.
அருகில் இருந்தவர்கள் தனபால் வீட்டாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்தனர். வீட்டிலிருந்த பொருட்கள் உடைந்து வீடு முழுவதும் சிதறிக்கிடப்பதை பார்த்து இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து குரங்குகளை விரட்டி விட்டனர்.
ஆனால் குரங்குகள் தொடர்ந்து அருகில் இருக்கும் வீடுகளுக்குள்ளும் நுழைந்து புதுத்தோட்டம் குடியிருப்பு பகுதியையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.எனவே எஸ்டேட் நிர்வாகமும் வனத்துறையினரும் சிங்கவால் குரங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாநகரில் கடந்த 5–ந் தேதி 820 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த ப...
-
இந்தோனேசியாவில் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு மலேசியாவின் ’ஏர் ஏசியா’விமானம் விபத்துக்குள்ளாகி ஜாவா கடலில் விழுந்தது. அதில் பயணம் செய...

0 comments:
Post a Comment