Wednesday, September 24, 2014
மதுரை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கும் 13 அணிகள் மோதின. இந்த போட்டிகளை மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலை வர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் தொடங்கி வைத்தார்.
கூடைப்பந்தாட்ட இறுதி போட்டியில் தேம்பாவனி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. பசுமலை பிகாசஸ் அணிக்கு 2–ம் பரிசும், மதுரை ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் அணிக்கு 3–ம் இடமும், கோபாலன் மெமரி அணிக்கு 4–ம் இடமும் கிடைத்தன.
வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகளை மதுரை மாநகராட்சி கமிஷனர் கதிரவன், கூடைப்பந்து கழக தலைவர் ராஜ்சத்யன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் தேவதாஸ், மாவட்ட விளையாட்டு அதிகாரி முருகன், கூடைப்பந்தாட்ட கழக மாவட்ட நிர்வாகிகள் வசந்தவேல், பேட்ரிக், ஒருங்கிணைப்பாளர்கள் செல்லப்பா, சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
0 comments:
Post a Comment