Sunday, September 07, 2014
திருப்பூர் : பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து இன்று (செப்., 7) தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், தண்ணீர் திருட்டை தடுப்பதற்கான நடவடிக்கை ஆமை வேகத்தில் நடக்கிறது. விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் உறுதியளித்தபடி, கண்காணிப்பு குழுக்கள் இன்னும் அமைக்கப்படவில்லை.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 93,766 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் தருணங்களில், பிரதான கால்வாயில் ஷட்டரை உடைத்தும், குழாய் அமைத்தும், வாய்க்காலுக்கு அருகில் கிணறு வெட்டியும், சைடு போர்வெல் அமைத்தும் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால், பாசன நீர் முறையாக கிடைப்பதில்லை. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கடந்த 2ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும், 4ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்திலும், கலெக்டர்கள் தலைமையில், பாசன சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை, போலீஸ், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பி.ஏ.பி., அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
இதில், அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு குழு அமைப்பது; அரசு மற்றும் தனியார் நிலங் களில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை முன்னதாகவே அகற்றுவது; பாசன நீரை திருடினால், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.இதனடிப்படையில், தாசில்தார், பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர்,பிறதுறை அதிகாரிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஆனால், இன்று (7ம் தேதி) தண்ணீர் திறக்க உள்ள நிலையில், நேற்று வரை அரசு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இரண்டு மாவட்டங்களிலும் அமைக்கப்படவில்லை. மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் வழங்கப்படவில்லை. முன்னதாகவே ஆய்வு செய்து, வாய்க்கால் கரை பகுதிகளில் முறைகேடாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "பிரதான கால்வாயில், 5 அல்லது 10 கி.மீ., நீளத் துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில் அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, போலீஸ், மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளின் பெயர்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது. தண்ணீர் திறப்பதற்கு முன், குழு அமைக்கப்படும்,' என்றனர்.
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 93,766 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் தருணங்களில், பிரதான கால்வாயில் ஷட்டரை உடைத்தும், குழாய் அமைத்தும், வாய்க்காலுக்கு அருகில் கிணறு வெட்டியும், சைடு போர்வெல் அமைத்தும் தண்ணீர் திருடப்படுகிறது. இதனால், பாசன நீர் முறையாக கிடைப்பதில்லை. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கடந்த 2ம் தேதி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும், 4ம் தேதி கோவை கலெக்டர் அலுவலகத்திலும், கலெக்டர்கள் தலைமையில், பாசன சங்க நிர்வாகிகள், வருவாய்த்துறை, போலீஸ், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பி.ஏ.பி., அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.
இதில், அதிகாரிகள் அங்கம் வகிக்கும் கண்காணிப்பு குழு அமைப்பது; அரசு மற்றும் தனியார் நிலங் களில் முறைகேடாக அமைக்கப்பட்டுள்ள குழாய்களை முன்னதாகவே அகற்றுவது; பாசன நீரை திருடினால், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.இதனடிப்படையில், தாசில்தார், பி.ஏ.பி., உதவி செயற்பொறியாளர், மின்வாரிய உதவி செயற்பொறியாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர்,பிறதுறை அதிகாரிகள் மற்றும் பாசன சங்க நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஆனால், இன்று (7ம் தேதி) தண்ணீர் திறக்க உள்ள நிலையில், நேற்று வரை அரசு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இரண்டு மாவட்டங்களிலும் அமைக்கப்படவில்லை. மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமும் வழங்கப்படவில்லை. முன்னதாகவே ஆய்வு செய்து, வாய்க்கால் கரை பகுதிகளில் முறைகேடாக பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "பிரதான கால்வாயில், 5 அல்லது 10 கி.மீ., நீளத் துக்கு ஒரு குழு என்ற அடிப்படையில் அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை, போலீஸ், மின்வாரியம் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகளின் பெயர்களை மாவட்ட நிர்வாகம் தயார் செய்து வருகிறது. தண்ணீர் திறப்பதற்கு முன், குழு அமைக்கப்படும்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment