Sunday, September 14, 2014
திருப்பூரில் பெண் போலீஸ் ஏட்டுவுடன் பார் உரிமையாளர் ஓட்டம் பிடித்தார். தனது கணவரை மீட்டு தரக்கோரி பார் உரிமையாளரின் மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பெண் போலீஸ் ஏட்டு
திருப்பூர் போலீஸ் லைன் முதல் வீதியில் உள்ள காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மனோஜ்குமார்(வயது 40). இவர் திருப்பூரில் சொந்தமாக ‘பாலிபேக்’ நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமாலா(37). இவர் கே.வி.ஆர். நகரில் உள்ள மத்திய போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு மேகா(11) என்ற மகளும், சந்தோஷ்குமார்(9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த மணிமாலா மீது லஞ்சப்புகார் எழுந்ததால், மாநகர போலீஸ் ஆணையர் சேஷசாய் சமீபத்தில் அவரை திருப்பூர் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தேர்தல் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக மணிமாலா தேர்தல் பிரிவில் பணியாற்றி வந்தார்.
பெண் போலீஸ் ஏட்டு மாயம்
போலீஸ் ஏட்டு மணிமாலாவுக்கும், திருப்பூர் ஆலங்காடு பகுதியில் பார் நடத்தி வரும் திருப்பூர் ஜீவாநகரை சேர்ந்த சக்திவேல்(41) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சக்திவேலுக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 21 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 11–ந் தேதி காலை மணிமாலா, தனது மொபட், செல்போன்கள் ஆகியவற்றை வீட்டிலேயே போட்டு விட்டு நகை மற்றும் துணிகளை எடுத்துக்கொண்டு, மாயமானார்.
இதுகுறித்து நேற்று முன்தினம் மணிமாலாவின் கணவர் மனோஜ்குமார் ‘‘எனது மனைவியை காணவில்லை. அவர் தனது கள்ளக்காதலனுடன் ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். காணாமல் போன தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்’’ என்று திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிமாலாவை தேடி வந்தனர்.
பார் உரிமையாளர் ஓட்டம்
இந்தநிலையில் நேற்று காலை திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு வந்த பார் உரிமையாளர் சக்திவேலின் மனைவி ஜெயந்தி, தனது கணவரை கடந்த 11–ந் தேதி காலை முதல் காணவில்லை. அவருடைய ஸ்கூட்டர், கார் மற்றும் செல்போன்கள் வீட்டிலேயே உள்ளன. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று புகார் செய்தார்.
இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் பார் உரிமையாளருடன் பெண் போலீஸ் ஏட்டு மாயமானது உறுதியாகியுள்ளது. மேலும், தங்கள் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதால், இருவரும் தங்கள் செல்போன்கள் மற்றும் வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்று இருப்பதால், போலீசாருக்கு துப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் இருவரின் வங்கி கணக்குகளையும் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
.jpg)
0 comments:
Post a Comment