Saturday, September 13, 2014
வால்பாறை, செப்.13–
கோவை மாவட்டம் வால்பாறை டேன்டீ எஸ்டேட்டில் சின்கோனா 2–வது குடியிருப்பு பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சுற்றி திரிந்து வருகின்றன.
பகலில் வனப்பகுதியில் இருக்கும் காட்டு யானைகள் இரவில் குடியிருப்பு பகுதிகள் உலா வந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்தியும், வாழை, தென்னை உள்ளிட்ட பயிர்களை தின்றும் சேதப்படுத்தி வந்தன.
இந்த நிலையில் நேற்று இரவு தாய் யானை ஒன்று தனது குட்டியுடன் வனப் பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றன. அப்போது தாய் யானை கால் தவறி குடியிருப்பு பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கும் தொட்டிக்குள் விழுந்தது.
இதையடுத்து யானை கடுமையாக பிளிறியது. யானையின் அலறல் சத்தம் கேட்டு அந்த குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் தொட்டியை சுற்றி நின்று கொண்டிருந்தது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் விரைந்து வந்த வனத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட முயன்றனர். ஆனால் காட்டு யானைகள் ஆக்கிரஷோமாக இருந்ததால் மீட்பு பணியில் ஈடுபட முடியவில்லை.
இதையடுத்து இன்று காலை மீட்பு பணியில் ஈடுபட ஆரம்பித்தனர். தண்ணீர் தொட்டிக்குள் ரப்பர் தூள்கள், மரக்கட்டைகள் மற்றும் மண் மூட்டைகளை போட்டு யானையை மேலே கொண்ட வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment