Monday, September 01, 2014
கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் அண்ணாமலை பல்கலைகழக வருவாய் அலுவலராக பணியாற்றிய கிறிஸ்து ராஜ் மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பதவியேற்றார். சென்னையை சேர்ந்த இவர் கடந்த 2005ம் ஆண்டில் குரூப்1 தேர்வில் வெற்றி பெற்றார். நாகப்பட்டணத்தில் ஆர்.டீ.ஓ ஆகவும், கரூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார். கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்ற கிறிஸ்து ராஜூக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வாழ்த்து தெரிவித்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரை கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள், தாசில்தார்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கிறிஸ்து ராஜ் கூறுகையில், ‘‘ அரசின் நல திட்டங்கள் ஏழை மக்களுக்கு விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருக்கும். வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிலங்களை பெற்று தந்து பணிகளை விரைவுபடுத்துவேன்,’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
மே தின விழாவை திமுகவினர் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என அக்கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கேட்டுக்கொண்டுள...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
-
*திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல்* ...
0 comments:
Post a Comment