Wednesday, September 17, 2014
விலையில்லா மடிக் கணினி வழங்கக் கோரி கூடலூரில் கல்லூரியின் நுழைவு வாயிலில் 3-ம் ஆண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற் பட்டது.
மாணவர்கள் போராட்டம்
கூடலூர் கோழிப்பாலம் பாரதியார் பல்கலைக் கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றி மாணவர்கள் கூறியதாவது:-
எங்கள் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவி தொகையும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம்.
கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி அமைத்து தர வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையான பஸ் வசதி குறித்து கல்லூரி முதல்வர், தாசில்தார், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமரசம் அடைந்த மாணவர்கள் நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
கூடலூர் கோழிப்பாலம் பாரதியார் பல்கலைக் கழக கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 11 மணிக்கு திடீரென கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு நின்று போராட்டம் நடத்தினர். இது பற்றி மாணவர்கள் கூறியதாவது:-
எங்கள் கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வில்லை. மேலும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவி தொகையும் வழங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றோம்.
கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி மாணவர்கள் சென்று வர போதிய பஸ் வசதி அமைத்து தர வேண்டும் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்ததும் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கோபி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்லூரி முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) லி.ரமேஷ் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாணவர்களின் முக்கிய பிரச்சினையான பஸ் வசதி குறித்து கல்லூரி முதல்வர், தாசில்தார், போக்குவரத்து அலுவலர் ஆகியோர் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும். மீதமுள்ள கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என மாணவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டது. இதில் சமரசம் அடைந்த மாணவர்கள் நுழைவு வாயில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment