Thursday, September 04, 2014
ரூ.2.10 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளதால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது என்றார் மத்திய கனரக தொழில்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசிய தாவது:
’’தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு குறைந்திருக்கிறது. தமிழக மீனவர் பிரச்சினைக்கு வெகுவிரைவில் நிரந்தர தீர்வு காணப்படும். சமீபத்தில் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி தொகைக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் முன்வந்துள்ளது. இதனால் இந்தியாவில் தொழில் புரட்சி ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்காக நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழகத்துக்கு நல்ல முடிவு கிடைத்ததுபோல காவிரி பிரச்சினையிலும் நல்ல முடிவு கிடைக்கும். முல்லை பெரியாறு பிரச்சினையில் தமிழக முதல்வரின் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து எதுவுமே செய்யாத காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவின் 100 நாள் ஆட்சியைப் பற்றி குறைகூற அருகதையில்லை.சுப்பிரமணியன் சுவாமி பாஜகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாதவர். கட்சியில் முக்கியப் பொறுப்பில் இல்லாத ஒருவரின் கருத்துக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை’’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment