Monday, September 15, 2014
திருப்பூர் மாநகராட்சியில்இடைத்தேர்தல் நடைபெற உள்ள, இரு வார்டுகளுக்கு வெளியிடப்பட்டுள்ள, புதிய வாக்காளர் துணை பட்டியலில், போட்டோக் கள் இல்லை. அதனால், கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு தீர்வு காண, மாநில தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 22வது வார்டில் 8,538 வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது 12 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். 45வது வார்டில் கடந்த தேர்தலில், 10 ஆயிரத்து 599 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 13 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012, 2013 மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 22வது வார்டில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்களில், 2,156 ஆண்கள்; 1,939 பெண்கள் என 4,095 வாக்காளர்களின் போட்டோ இல்லாமல், பட்டியல் தயாரித்து, "பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் போட்டோ மட்டும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள ஓட்டு பதிவாக அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டோவுடன் கூடிய துணை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""வாக்காளர் பட்டியல் போட்டோ இல்லாமல் இருப்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கொடுத்த கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் கமிஷனுடன் பேசி, வெகுவிரைவில் தீர்வு பெற்றுத்தரும்,'' என்றார்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசியல் கட்சியினர் கொடுத்த கடிதங்கள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நாளை (இன்று) அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 22வது வார்டில் 8,538 வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது 12 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். 45வது வார்டில் கடந்த தேர்தலில், 10 ஆயிரத்து 599 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 13 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012, 2013 மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 22வது வார்டில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்களில், 2,156 ஆண்கள்; 1,939 பெண்கள் என 4,095 வாக்காளர்களின் போட்டோ இல்லாமல், பட்டியல் தயாரித்து, "பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டை எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் போட்டோ மட்டும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள ஓட்டு பதிவாக அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டோவுடன் கூடிய துணை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""வாக்காளர் பட்டியல் போட்டோ இல்லாமல் இருப்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கொடுத்த கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் கமிஷனுடன் பேசி, வெகுவிரைவில் தீர்வு பெற்றுத்தரும்,'' என்றார்.
மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசியல் கட்சியினர் கொடுத்த கடிதங்கள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நாளை (இன்று) அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment