Saturday, September 13, 2014
காங்கயம், செப்.13–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் பொங்கலூரை அடுத்த தேவம்பாளையத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 50). இவர் கடந்த 10–ந் தேதி குளிப்பதற்கு பி.ஏ.பி. வாய்க்காலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் அருள்தாசை தேடினர். ஆனால் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவினாசிபாளையம் போலீசில் அருள்தாஸ் மாயமாகிவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான அருள்தாசை தேடி வந்தனர். இந்த நிலையில் காங்கயத்தை அடுத்த அலகுமலை முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் ஒரு ஆண் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது மாயமான அருள்தாஸ் என்பது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...

0 comments:
Post a Comment