Saturday, September 13, 2014
திருப்பூர், செப்.13–
திருப்பூர் காங்கயம் கிராஸ் ரோடு கே.என்.பி. காலனியை சேர்ந்தவர் முகமது இலியாஸ் (வயது 21). எலெக்ட்ரீசியன். இவருக்கும் நஜீரா பானு (21) என்பவருக்கும் கடந்த 17.11.2013–ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நஜீரா பானுவின் பெற்றோர் 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் கொடுத்தனர்.
திருமணமான 15 நாட்களில் முகமது இலியாசும், அவரது தாயார் செரின் பேகமும் சேர்ந்து கொண்டு நஜீரா பானுவிடம் வரதட்சணையாக 4 பவுன் தங்க நகைகளும், ரூ.2 லட்சம் ரொக்க பணமும் வாங்கி வரும்படி கூறி கொடுமைப்படுத்தினர்.
இந்த கொடுமை தாங்க முடியாமல் நஜீரா பானு வீட்டில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து நஜீரா பானு நேராக தனது தந்தை வீட்டுக்கு சென்று தங்கினார். உடல்நலம் தேறியவுடன் மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்தார்.
அங்கு முகமது இலியாஸ் தனது தாயார் செரின் பேகத்துடன் சேர்ந்து கொண்டு மீண்டும் நஜீரா பானுவை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். சிகரெட்டால் நஜீரா பானுவின் தொடையில் சூடு வைத்தும், ஆக்ஷா பிளேடை தீயில் வைத்து சூடுபடுத்தி அவரது உடம்பில் காயங்கள் ஏற்படுத்தியும் கொடுமைப்படுத்தி வந்தனர்.
நாளுக்கு நாள் இருவரது கொடுமையும் தீவிரமானதால் பொறுத்துக் கொள்ள முடியாத நஜீரா பானு திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்துரினிஷா வழக்குப்பதிவு செய்து முகமது இலியாஸ் மற்றும் செரின் பேகத்தை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
Share on facebook Share on twitter More Sharing Services வாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் த...

0 comments:
Post a Comment