Monday, September 01, 2014
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் கோழி இறைச்சி கழிவுகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டி வருவதால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் இறைச்சி கடைகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் அதிக அளவில் உள்ளன. ஆடுவதைக்கூடம் மூலமாக, ஆடுகளை தோல் உரித்து, கறியாக மாற்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு பிரச்னைகளால் ஆடுவதைக் கூடம் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளது. தற்போது, ஆடுவதை கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், கோழி இறைச்சி கடைகளில் நிகழும் சுகாதார சீர்கேடுகளை யாரும் கவனிப்பதே இல்லை. ஆட்டு தோல் நீங்கலாக, அனைத்து பகுதிகளும் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுதோலும் பதப்படுத்தப்பட்டு வேறு பயன்பாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. கோழி இறைச்சி கடையில், குடல், இறகுடன் கூடிய தோல் ஆகியவை கழிக்கப்படுகின்றன. “டிரம்‘களில் சேகரிக்கப்பட்டு, இரவு நேரங்களில் சாக்கு மூட்டையாக கட்டி, நீர்நிலைகளிலும், ஓடைகளிலும், குப்பை மேட்டிலும் வீசப்படுகின்றன. இரு நாட்களில், அவை அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. நீர்நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டும்போது, மூன்று நாட்களில் புழுப்பிடித்து காணப்படுகின்றன. மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், ஆட்டு இறைச்சி கடைகளை கண்காணிப்பதுபோல், கோழி இறைச்சி கடைகளை கண்காணிப்பது இல்லை.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் கோழி இறைச்சி கடைகளில் சேகரமாகும் கழிவுகளை சாக்கடைகளில் கொட்டுகின்றனர். சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்த இறைச்சி கடைகளில் இருந்தும் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, சுகாதார ஆய்வுக்குழு முடிவெடுக்க வேண்டும். கள ஆய்வு நடத்தி, சாக்கடை கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வ...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...

0 comments:
Post a Comment