Friday, September 05, 2014
இந்திய தொழில் கூட்டமைப்பின் அங்கமான இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றைய பெண்களின் மாறிவரும் பங்கும், பொறுப்புகளும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் டி.ஜி.பி. கிரண்பேடி பேசியதாவது:–
படித்த மக்கள் மனதிலும் ஆண், பெண் பாகுபாடு நிலவுகிறது. இந்த வேறுபாட்டை நீக்க பெண்கள் முன்வர வேண்டும். இதற்கு கட்டாயமாக கல்வி அறிவு வேண்டும்.
எந்த துறையிலும் ஆண்களை போல பெண்களும் மிக வலிமையுடன் செயல்பட முடியும். 80 சதவீத பெண்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். 10 சதவீத மக்கள் தான் நாட்டுக்காக உழைக்கிறார்கள்.
பெண்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் தங்கள் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். உயர வேண்டும். சுயதொழில் புரிவதற்கு பெண்கள் முன்வர வேண்டும். தலைமை பொறுப்பை ஏற்று நிறுவனங்களை நடத்த வேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள் மற்றும் பாலியல் தொந்தரவு இன்னும் சமுதாயத்தில் நிலவி வருகிறது. இதனை ஒழிக்க பெண்கள் தான் முன்வரவேண்டும் என்றார்.
தொடர்ந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மோடியின் ஆட்சி குறித்த கேள்விக்கு பிரதமர் நரேந்திர மோடியின் 100 நாள் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
சாதாரணமானவர்களும் மின்னஞ்சல் மூலம் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சி மே 16 ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் அமைச்சர் வளர்மதி ஆய்வு மேற்கொண்டார் கொரோனா தொற்று பாதிப்பை அடுத்...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
மகாசிவராத்திரியை முன்னிட்டு மதுரையிலிருந்து வெளியூர்களுக்கு விடிய விடிய செவ்வாய்க்கிழமை இரவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாசி மக...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...

0 comments:
Post a Comment