Saturday, September 06, 2014

கேரளாவில்
நேற்று இரவு முதல் அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. இதனால் நேற்று
பகல் முழுவதும் சலுகை விலையில் இருக்கும் ஸ்டாக்குகளை விற்றுத் தீர்த்தனர்
பார் உரிமையாளர்கள்.
கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான பார்களை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் 312 பார்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான பார்களையும் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. மேலும், ஓணம் பண்டிகை விரைவில் கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பார்களிலும் மதுபான வகைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பார்களை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் பார் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, கடைசி நாளன்று ஒரு பெக் மதுபானம் வாங்கினால், 3 பெக் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் கேரளாவிலுள்ள 312 பார்களிலும் கூட்டம் அலைமோதியது.
வருகிற 1ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள 30 அரசு மதுபானக் கடைகளையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான பார்களை மூட உத்தரவிட்டார். அதன் பின்னர் 312 பார்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான பார்களையும் ஆகஸ்ட் 25-ம் தேதி இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, அனைத்து மதுபான பார்களும் மூடப்பட்டன. மேலும், ஓணம் பண்டிகை விரைவில் கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு பார்களிலும் மதுபான வகைகள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், பார்களை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் பார் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, கடைசி நாளன்று ஒரு பெக் மதுபானம் வாங்கினால், 3 பெக் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவித்திருந்தனர். இதனால் கேரளாவிலுள்ள 312 பார்களிலும் கூட்டம் அலைமோதியது.
வருகிற 1ஆம் தேதி முதல் கேரளாவில் உள்ள 30 அரசு மதுபானக் கடைகளையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment