Wednesday, September 10, 2014
திருப்பூர், : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
உடுமலைபேட்டையில் கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி லீலாவதி என்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார், லீலாவதிக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஓட்டல் தொழிலாளி சந்திரா என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அந்த பெண்ணை சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக 5 நாட்களாக தனியாக அடைத்து வைத்து போலீசார் சித்ரவதை செய்திருக்கின்றனர் என்ற விவரம் தற்போது சென்னை உயர் நீதிமன்ற விசாரணை மூலம் வெளிவந்திருக்கிறது. போலீசார் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தியும், தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு அடித்தும், நகக்கண்களில் ஊசியை குத்தியும் கொடுமைப்படுத்தியதாக அவரது மகள் ராஜகுமாரி நீதிமன்றத்தில் கொடுத்துள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
காவல்துறையின் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விசாரணைக்காக ஒருவரை காவல் துறையினர் அழைத்துச் சென்றால் அது குறித்து அவரது குடும்பத்தாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பெண்களை இரவு நேரங்களில் காவல் நிலையங்களில் தங்க வைக்கக்கூடாது, கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை தமிழக காவல்துறை துளிகூட மதிப்பதில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த மாவட்ட காவல்துறை மூலம் மேற்கண்ட சம்பவத்தை விசாரணை செய்தால் உண்மைச் சம்பவம் வெளிவராது. மேலும் சந்திராவின் குடும்பத்தாரிடம் சமரசம் பேசியும், மிரட்டியும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு தவறிழைத்த காவலர்கள் மீதும், அதற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
0 comments:
Post a Comment