Friday, September 05, 2014
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ கோவை வந்தார். அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எங்கள் கட்சி ஏற்கனவே எடுத்த முடிவின் அடிப்படையில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று தான் அறிவித்தோம். உள்ளாட்சி தேர்தலையே புறக்கணிப்பதாக கூறவில்லை. எனவே தான் ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பா.ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் பணம், பதவி, அதிகார பலத்தை தாண்டி எங்கள் கூட்டணி வெற்றி பெறும். மது மற்றும் இலவசம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி 100 நாள் ஆட்சியில் அவரது வெளிநாட்டு பயணங்கள் மூலம் அண்டை நாடுடனான உறவு பலப்பட்டுள்ளது. இருப்பினும் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சினை, பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்தது, சமஸ்கிருத வார விழா கொண்டாட அறிவுறுத்தியது உள்ளிட்ட விவகாரங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது.
ம.தி.மு.க. சார்பில் வருகிற 15–ந் தேதி அண்ணா பிறந்தநாளன்று சென்னையில் மாநில மாநாடு நடைபெறுகிறது என்றார்.
தி.மு.க. உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு குறித்த கேள்வியை நிருபர்கள் கேட்டபோது உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. புறக்கணித்திருப்பது அவர்களது ஜனநாயக முடிவு. அது பற்றி எதுவும் கருத்து கூற முடியாது என்றார்.
பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயலாளர் ஜி.கே.எஸ்.செல்வக்குமார், மேயர் வேட்பாளர் நந்தகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...

0 comments:
Post a Comment