Wednesday, September 10, 2014
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடிகை சி.ஆர்.சரஸ்வதி கிழக்கு மண்டல பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அணைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, தலைமை கழக பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் தலைமை கழக பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைதேர்தல் வருகின்ற 18 ம் தேதி நடைபெற உள்ளது. மேயர் பதவிக்கு அண்ணா தி.மு.க.சார்பில் கணபதி ப.ராஜ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி யில் உள்ள 100 வார்டுகளிலும் தமிழக அமைச்சர்கள், வாரியத்தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 57வது வார்டு, மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அணைத்து பகுதியிலும் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளரும், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஆர்.சின்னசாமி, தலைமை கழக பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, மாவட்ட பொருளாளர் சிங்கை என்.முத்து, 57வது வார்டு கவுன்சிலரும், தொகுதி செயலாளருமான மாரப்பன், வட்டார செயலாளர் ஆர்.வடிவேல்,மற்றும் அண்ணா தி.மு.க.வினர் வீதி, வீதியாக சென்று பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். பின்னர் மசக்காளிபாளையம் ரவுண்டாணா அருகில் தலைமை கழக பேச்சாளர் நடிகை சி.ஆர்.சரஸ்வதி பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
இந்தியாவில் பசி, பட்டினி இல்லா மாநிலமாக விளங்குவது தமிழகம் மட்டுமே.1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பென்சில், பேனா, காலுக்கு செருப்பு, படிக்க புத்தகம், நோட்டு, புத்தகப்பை, அட்லஸ் புத்தகம் என 14 வகையான பொருட்களை தமிழக முதல்வர் விலையில்லாமல் வழங்கி வருகிறார். 11ம், 12ம் வகுப்பு படிக்கும் போது விலையில்லா சைக்கிள் வழங்குகிறார். காலேஜ் செல்லும்போது மடிக்கணினி வழங்குகிறார்.ரூ.25 ஆயிரம் கொடுத்து பவுன் வாங்க முடியாத ஏழைகளுக்கு அவர்களின் திருமணத்திற்கு ரூ.25 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் இந்தியாவில் வழங்கும் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே. மழைநீர் சேகரிப்பு மற்றும் மக்கள் நல பணிகளை முழுமையாக நிறைவேற்றும் மாநிலம் தமிழ்நாடு அதன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மக்களுடம் மட்டுமே கூட்டணி அமைத்து தன்னந்தனியாக 39 தொகுதியில் நின்று 37 தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். இப்போதே தமிழகத்தில் உள்ள 217 தொகுதியில் அண்ணா தி.மு.க.வெற்றி பெற்று விட்டது.வருகின்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க.வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும் கோவை மாநகராட்சிக்கு முதல்வர் ரூ.200 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.இந்த பகுதிக்கும் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா ஆதரவு பெற்ற வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு அதிக வாக்குகள் அளித்து அவரை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.இவ்வாறு சி.ஆர்.சரஸ்வதி பேசினார்.
பிரச்சார கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிங்கை அம்புஜம், மகளிர் அணி பகுதி இணை செயலாளர் குமுதவல்லி, பேரவை செயலாளர் ராஜேந்திரன், வட்டார அவைத்தலைவர் பன்னீர் செல்வம், பெரியார் ராமசாமி, பார்த்திபன்,சௌந்தரராஜன்,தாஸ், எம்.கே.பி.செல்வராஜ்,சேகர், பழனிசாமி, திண்டிவனம் எம்.எல்.ஏ.ஹரிதாஸ், விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பி.தங்கபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் செல்லமுத்து, வார்டு பொறுப்பாளர்கள் ரஜினி குணசேகரன்,முருகானந்தம், குமரேசன், பால்ராஜ், திருநாவுகரசு, ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, கௌரி ஆகியோர் உள்பட் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட 3வது மாநாடு ஞாயிற்றுக்கிழமை முத்தரசநல்லூர் என் எஸ் கே திருமண மஹாலில் தோழர் ...
-
திருப்பூர், பி.என்.ரோடு பொன்னம்மாள் நகரில் வசித்து வருபவர் பழனிசாமி(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(44).இருவரும் கட்டிடத்தொழிலாளிகள். இவர்க...
-
சட்டப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வ.ஜெய...
-
திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, தாராபுரம் (தனி), அவினாசி (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், கா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் கல்லுப்பட்டி மற்றும் காரியாபட்டி செல்லும் நெடுஞ்சாலைகள் உள்ளது. இந்த சாலைகள் மதுரை – தூத்துக்குடி மற்ற...
-
தெய்வத் திரு தாரா நல்லூர் கண்ணன் அறக்கட்டளை சார்பாக திருச்சி பிராட் டியூர் வட்டார போக்குவரத்து கழகம் அருகே தண்ணீர் பந்தல் தொழிலதிபர் ட...


0 comments:
Post a Comment