Wednesday, September 03, 2014
திருப்பூர், : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை முதல்வராகவும், துறை தலைவராகவும் பணிபுரியும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர் நேற்று முன்தினம் கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுரியில் துணை முதல்வராகவும், வணிகவியல் துறை தலைவராகவும் இருப்பவர் கல்லூரியின் உடை மாற்றும் அறையில் எடுத்த மாணவிகள் சிலரின் ஆபாச வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறி மிரட்டியதாக, நேற்று முன்தினம் மாணவ, மாணவியர் ஏராளமானோர் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கல்லூரி முன்பு அமர்ந்து மூன்று மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லூரி மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து கல்லூரிக்கு வந்த காங்கயம் டி.எஸ்.பி., சுருளிராஜா, ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம், எஸ்.ஐ., வருணியா மற்றும் கல்லூரி முதல்வர் சுப்ரமணியம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட வணிகவியல் துறை தலைவரை மாற்றுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும், ஆபாச வீடியோ விவகாரம் குறித்து விசாரித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவ, மாணவியர்கள் தர்ணா போராட்டத்தை கைவி ட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர், கல்லூரி முதல்வர் சுப்ரமணி இதுகுறித்து கூறுகையில், வணிகவியல் துறை தலைவர் மீது கூறப்பட்டுள்ள இந்த புகார் உண்மையல்ல, அவர் மிகவும் கண்டிப்பாக நடத்து கொள் வதால் சிலர், அவர் மீது தவறான புகாரை தெரிவித்துள்ளனர் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment