Friday, September 19, 2014
கிருஷ்ணகிரி மாவட்டத் தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங் களில் காட்டு யானைகள் மிதித்து அப்பாவி கிராம மக்கள் பலியாவது தொடர்கதையாகி வரு கிறது. வனத்துறை ஒத் துழைப்பு இல்லாத நிலை யில் கிராம மக்களே யானைகளை விரட்ட முயற்சிக்கும் போது இது போன்ற அசம்பா விதங் கள் நிகழ்வதாக குற்றம் சாட்டப்படுகிறது
காட்டு யானை கூட்டம்
வனப்பகுதிகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்னி, மலைப்பாம்பு போன்ற காட்டு விலங்குகள் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வரு வதால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை யான நிகழ்வாகி விட்டது.
குறிப்பாக, காட்டு யானை கள் கிராமப் பகுதிகளுக்குள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை வந்து பொது மக்களை மிரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தது. இதனால் யானைகள் மிதித்து பலியாவோரின் எண்ணிக் கையும் ஆண்டுதோறும் அதி கரிக்க தொடங்கி உள்ளது.
விவசாய பயிர்கள் நாசம்
கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்தது. இவை கள் 2 பிரிவுகளாக பிரிந்து கர் நாடகா மாநில எல்லை யோரம் உள்ள வனப்பகுதி களில் ஒரு குழுவும், ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள மகாராஜகடை, குருவிநாயனப் பள்ளி, காளிக்கோவில் போன்ற கிராமப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியிலும் சுற்றி வருகிறது.
குறிப்பாக மகாராஜகடை பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்து விவசாய நிலங்களில் பொது மக்கள் பயிரிட்ட விவசாய பயிர்களையும், மாந்தோட்டங் களையும் அழித்து வந்தன. இரவு நேரங்களில் வரும் காட்டு யானை கூட்டத்தின் அட்டகாசத்தை பார்த்த இந்த பகுதி விவசாயிகள் மனம் நொந்து போய் உள்ளனர்.
யானை சாவு
இதுகுறித்து கிராம மக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், காட்டு யானைகளை விரட்ட வனத் துறை முழுமுயற்சி எடுக்க வில்லை. இந்த நிலையில் மகாராஜகடை பகுதியில் மாசு கலந்த தண்ணீரை குடித்த யானை ஒன்று பலியானது. அதற்கு பிறகும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த யானைகள் மகாராஜாகடை கிராமத்தை ஒட்டிய பகுதியில் இரவு நேரங் களில் வரத் தொடங் கியது.
எந்த நேரமும் ஊருக்குள் நுழையும் என்ற நிலையில் கிராம மக்களே யானைகளை காட்டுக்குள் விரட்டலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண் டனர்.
விவசாயி பலி- சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மகாராஜகடை முனியப்பன் கோவில் பகுதிக் குள் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரவே, கிராம மக்கள் அவற்றை விரட்ட தீப்பந்தங்களுடன் கிளம்பினார்கள். அவர்களை யானைகள் திருப்பி விரட்ட தொடங்கியது. இதில் அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன்(55) என்ற விவசாயி யானையிடம் சிக்கிக் கொண்டார்.
யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் பலியான சின்னப் பையனின் உடலை மகாராஜ கடையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப் போது வனத்துறை அலுவல கத்தை சிலர் உடைத்து சூறை யாடினார்கள்.
பொதுமக்கள் விரக்தி
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பிணத்துடன் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அப்போது ஆவேசத்துடன் பேசிய அந்த பகுதி பொது மக்கள், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண் டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் எங்கள் கிராமத் தையும், பொதுமக்களையும் யானைகளிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரங்களில் தீப்பந்தம் மற்றும் பட்டாசு களுடன் கிளம்பினோம். இதில் சின்னப்பையன் பரி தாபமாக இறந்து விட்டார். வனத்துறையின் அலட்சியமே இவரின் உயிரிழப்புக்கு காரண மாகும் என தெரிவித்தனர். நள்ளிரவு 2 மணி வரை நீடித்த பொதுமக்களின் போராட்டம், அதிகாலையில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மகராஜாகடை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
காட்டு யானை கூட்டம்
வனப்பகுதிகள் நிறைந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யானை, சிறுத்தை, மான், காட்டுப்பன்னி, மலைப்பாம்பு போன்ற காட்டு விலங்குகள் அதிகம் வாழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வரு வதால் காட்டு விலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கை யான நிகழ்வாகி விட்டது.
குறிப்பாக, காட்டு யானை கள் கிராமப் பகுதிகளுக்குள் மட்டுமல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலு வலகம் வரை வந்து பொது மக்களை மிரட்டி சென்ற சம்பவங்களும் நிகழ்ந்தது. இதனால் யானைகள் மிதித்து பலியாவோரின் எண்ணிக் கையும் ஆண்டுதோறும் அதி கரிக்க தொடங்கி உள்ளது.
விவசாய பயிர்கள் நாசம்
கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடந்த 6 மாதத்திற்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கூட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் நுழைந்தது. இவை கள் 2 பிரிவுகளாக பிரிந்து கர் நாடகா மாநில எல்லை யோரம் உள்ள வனப்பகுதி களில் ஒரு குழுவும், ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள மகாராஜகடை, குருவிநாயனப் பள்ளி, காளிக்கோவில் போன்ற கிராமப் பகுதிகளை ஒட்டிய வனப்பகுதியிலும் சுற்றி வருகிறது.
குறிப்பாக மகாராஜகடை பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி வந்து விவசாய நிலங்களில் பொது மக்கள் பயிரிட்ட விவசாய பயிர்களையும், மாந்தோட்டங் களையும் அழித்து வந்தன. இரவு நேரங்களில் வரும் காட்டு யானை கூட்டத்தின் அட்டகாசத்தை பார்த்த இந்த பகுதி விவசாயிகள் மனம் நொந்து போய் உள்ளனர்.
யானை சாவு
இதுகுறித்து கிராம மக்கள் தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும், காட்டு யானைகளை விரட்ட வனத் துறை முழுமுயற்சி எடுக்க வில்லை. இந்த நிலையில் மகாராஜகடை பகுதியில் மாசு கலந்த தண்ணீரை குடித்த யானை ஒன்று பலியானது. அதற்கு பிறகும் யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த யானைகள் மகாராஜாகடை கிராமத்தை ஒட்டிய பகுதியில் இரவு நேரங் களில் வரத் தொடங் கியது.
எந்த நேரமும் ஊருக்குள் நுழையும் என்ற நிலையில் கிராம மக்களே யானைகளை காட்டுக்குள் விரட்டலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் ஒருங்கிணைந்து தீப்பந்தங்கள் கொளுத்தியும், பட்டாசு வெடித்தும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் பார்த்துக் கொண் டனர்.
விவசாயி பலி- சாலை மறியல்
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மகாராஜகடை முனியப்பன் கோவில் பகுதிக் குள் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வரவே, கிராம மக்கள் அவற்றை விரட்ட தீப்பந்தங்களுடன் கிளம்பினார்கள். அவர்களை யானைகள் திருப்பி விரட்ட தொடங்கியது. இதில் அனை வரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். ஆனால் இதே கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன்(55) என்ற விவசாயி யானையிடம் சிக்கிக் கொண்டார்.
யானை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். இதைக் கேள்விப்பட்ட கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் பலியான சின்னப் பையனின் உடலை மகாராஜ கடையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு வைத்து மறியலில் ஈடுபட்டனர். அப் போது வனத்துறை அலுவல கத்தை சிலர் உடைத்து சூறை யாடினார்கள்.
பொதுமக்கள் விரக்தி
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் நடராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பிணத்துடன் மறியலில் ஈடு பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். அப்போது ஆவேசத்துடன் பேசிய அந்த பகுதி பொது மக்கள், கடந்த 1 மாதத்திற்கும் மேலாக சுற்றித் திரியும் காட்டு யானைகளை விரட்ட வேண் டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால் அவர்கள் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் எங்கள் கிராமத் தையும், பொதுமக்களையும் யானைகளிடம் இருந்து பாதுகாக்க இரவு நேரங்களில் தீப்பந்தம் மற்றும் பட்டாசு களுடன் கிளம்பினோம். இதில் சின்னப்பையன் பரி தாபமாக இறந்து விட்டார். வனத்துறையின் அலட்சியமே இவரின் உயிரிழப்புக்கு காரண மாகும் என தெரிவித்தனர். நள்ளிரவு 2 மணி வரை நீடித்த பொதுமக்களின் போராட்டம், அதிகாலையில் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து மகராஜாகடை பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
ஷமிதாப் படத்தில் ரஜினி அல்லது தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்றதற்கு, 'தனுஷிடம் கேளுங்கள்' என்று பரிந்துரை செய்திருக்கிறா...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...

0 comments:
Post a Comment