Sunday, October 12, 2014
விசாகப்பட்டினம்: ஹுட்ஹுட் புயல் விசாகப்பட்டினத்தை தாக்கியது. இதையடுத்து அங்கு மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. வங்க கடலில் நிலை கொண்ட மிகவும் தீவிரமான ஹுட்ஹுட் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிஸா மாநிலம் கோபால்பூர் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் முன்கூட்டியே விசாகப்பட்டினத்தை தாக்கியுள்ளது. துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் தற்போது மணிக்கு 180 கிமீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். மழைக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். பலத்த காற்றால் கூரை வீடுகள் பறந்து வருகின்றன, மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன, மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன. விசாகப்பட்டினத்தில் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மீட்பு படையினருக்கு அதை தடையாக உள்ளது. புயலால் கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஆயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஒடிஸா மாநிலத்தில் கடற்கரையோரம் உள்ள 8 மாவட்டங்களில் வசிக்கும் 3.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புயல் விசாகப்பட்டினத்தை தாக்கி வரும் வேலையில் ஒடிஸாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இரு மாநிலங்களிலும் மீட்பு படையினர் , விமானப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் தொடர்பில் இருக்குமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பத்திரிகை தலையங்கங்களில் இலக்கியம் அவசியம் இடம் பெறவேண்டும் என, அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மதுரை மணியம...
-
ரி லீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருவெறும்பூர் தொகுதி, துவாக்குடி நகரத்தில் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீதிவீதியாக நடந்து தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணிய...
-
திருச்சி டெல்லியில் பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருப்பூர் மாவட்டத்தின் திட்டக்குழுகூட் டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட திட்டக...

0 comments:
Post a Comment