Friday, October 24, 2014
சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் கடந்த 2013ஆம் ஆண்டில் மட்டும் வழக்கறிஞர்களின் மூலம் 3000க்கும் அதிகமான திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு வழக்கிற்காக நீதிமன்ற உத்தரவுக்கமைய ஆய்வுகளைச் செய்தபோது, 2013ஆம் ஆண்டில் ராயபுரத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் 1559 காதல் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதே ஆண்டில் வடசென்னை பதிவு அலுவலகத்தில் 1937 திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது.
இந்த திருமணங்கள் எல்லாம் முதலில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் ரகசியமாக நடப்பதாகவும் பின்னர் வழக்கறிஞர்கள் அளிக்கும் சான்றிதழ்கள் மூலம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கம் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்றும், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி போலிப்பதிவு திருமணங்களின் பின்னணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு துணை போன பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்களால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்திருக்கும் உயர்நீதிமன்றம், வழக்கறிஞர்கள் காதல் ஜோடிகளுக்கு தங்களது அறையில் ரகசிய திருமணம் செய்து வைக்கக்கூடாது என்றும், அப்படி திருமணம் செய்து வைத்த்தாகப் புகார் வந்தால், அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருமணத்தைப் பதிவுசெய்யும்போது, தம்பதி இருவரும் வருவதை பதிவுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
க.பரமத்தி அருகே விசுவநாதபுரி ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம்83 மனுக்கள் பெறப்பட்டது க.பரமத்த...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 12.9.16 திருச்சி தொடர்வண்டிக் கோட்டத்தலைமையகம் முற்றுகை போரட்டம் நூற்றுக்கணக்கானோர் கைது திருச்சிய...
-
விரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல், சிறை, தீயணைப்பு ஆகியவற்றுக்கு 15 ஆயிரம் காவலர்களைத் ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
கத்தி படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் தமிழ் அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்தன. எனவே, லைக்காவை கழற்றிவிடலாம் என விஜய் முடிவு செய்தார...
0 comments:
Post a Comment