Wednesday, October 29, 2014
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி
கன மழையால்பாதிக்கப்பட்டோருக்கு வெள்ள நிவாரண உதவி எம்எல்ஏ வழங்கினார் அரவக்குறிச்சி, : கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்எல்ஏ கே.சி.பழனிச்சாமி வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
அரவக்குறிச்சி ஒன்றியப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்து 5 அடி உயரம் வரை தேங்கி நின்றது. இதனால் வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு உள் ளிட்ட மளிகை சாமான்கள், பாத்திரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி எம்எல்ஏ கே.சி. பழனிச்சாமி, அரவக்குறிச்சியில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தெரு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, சவேரியார் தெரு, சின்னப்ப பள்ளிவாசல் தெரு, பூச்சாங்கிணறு தெரு உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வை யிட்டு பொதுமக்களிடம் நிலைமையை கேட்டறிந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட 60 குடும்பத்தினருக்கு தலா ரூ. 1000 மற்றும் உணவுப் பொட்டலம் உள்ளிட்ட வெள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் நன் னியூர் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.மணியன், அரவக்குறிச்சி நகரச் செயலாளர் அண்ணா துரை, பள்ளபட்டி நகர திமுக செயலாளர் தோட்டம் பசீர்அகமது, இளைஞர் அணி, ஆனந்தகுமார், திருக்குமார் உள் ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி மாவட்ட ஜேசிபி உரிமையாளர்கள் சங்க தொடக்க விழா நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நட...
-
மதுரை மாநகரில் மையப்பகுதியில் எம் ஜி ஆர் விளையாட்டு மைதானம் பல்வேறு விளையாட்டுகளின் மையமாக உள்ளது .மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்ல முயலும் குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்குவதை தடுப்பதற்காக மேலும் பெரிய முயற்சிகள் மேற்க...
-
திருச்சி கனரா வங்கி மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொ...
-
*திருச்சியில் 36 பேருக்கு* கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை இன்று 5 பேர் பாதிப்பு மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தகவல் திருச்சி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
0 comments:
Post a Comment