Monday, October 27, 2014
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் அமராவதி ஆற்றில் கலக்கும் போது காட்டாற்று வெள்ளம் உருவாகும் அபாயம் உள்ளது.
இது குறித்து உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாசியர் (ஆர்.டி.ஓ) சாதனைக்குறள், தாசில்தார்கள் சைபுதீன் (உடுமலை), சண்முகவடிவேல் (மடத்துக்குளம்) ஆகியோர் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் அமராவதி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறித்தி உள்ளனர். மேலும் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ, ஆற்றில் இறங்க வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்தும் உள்ளனர்.
இந்த நிலையில் அமராவதி அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அமராவதி அணையின் நீர் மட்ட உயரம் 90 அடியாகும். மொத்த கொள்ளளவு 4 ஆயிரத்து 47 மில்லியன் கன அடியாகும். நேற்று காலை நிலவரப்பட்டி நீர் மட்ட உயரம் 82.67 அடியாக உயர்ந்து. அணைக்கு வினாடிக்கு 1532 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 258 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 3 ஆயிரத்து 400.25 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
திருமூர்த்தி அணையின் மொத்த உயரம் 60 அடி. மொத்த கொள்ளளவு 1935 மில்லியன் கன அடியாகும். அணையின் நேற்றைய நீர் மட்ட உயரம் 39.73 அடியாகும். அணைக்கு காண்டூர் கால்வாய் மூலம் வினாடிக்கு 836 கனஅடி தண்ணீரும், பாலாறு மூலம் வினாடிக்கு 10 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. அணையில் 1114 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1185 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார...
-
கட்டாய திருமண சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொது செயலாளர் முகமது அபுபக்...
-
ஈரோடு அருகே உள்ள சோலார் புதூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 59) தறிபட்டறை அதிபர். இவர் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 11.30 மணியள...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
நடித்தவர்கள் ஆண்டது போதும். படித்தவர்கள் நாட்டை ஆள வாய்ப்பு தாருங்கள்" என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ...



0 comments:
Post a Comment