Wednesday, October 08, 2014
சத்தி வனப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால், பெருக்கெடுத்து ஓடும் வன ஓடைகளில் யானைகள் குளித்து கும்மாளம் போடுகினசத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனு£ர், தாளவாடி, கேர்மாளம், தலமலை, கடம்பூர் வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கழுதைபுலி, யானை, காட்டெருமை, கரடி, செந்நாய் மற்றும் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் கிடைத்து வந்தது. இதனால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியே வராமல் இருந்தன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சத்தியமங்கலம் வனப்பகுதியில் பருவமழை சரிவர பெய்யாததால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் வறண்டுபோனது. மேலும் வனப்பகுதி முற்றிலும் காய்ந்துபோனது. இதனால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது.இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சத்தியமங்கலம் வனப்பகுதியான தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வன ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.
கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் ரோட்டோரம் ஓடும் வன ஓடைகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக சென்று குளித்து கும்மாளம் அடிக்கின்றன. பின்னர் வனஓடைகளில் உள்ள தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு செல்கின்றன.
கடம்பூரில் இருந்து குன்றி செல்லும் ரோட்டோரம் ஓடும் வன ஓடைகளில் யானைகள் கூட்டம், கூட்டமாக சென்று குளித்து கும்மாளம் அடிக்கின்றன. பின்னர் வனஓடைகளில் உள்ள தண்ணீரை தாகம் தீர குடித்துவிட்டு செல்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நடைபெற உள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் க...
-
திருச்சியில் ; தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந...
-
திருப்பூர், அவிநாசி, பல்லடம் மற்றும் மங்கலம் பகுதிகளில் உள்ள விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு கூடுத...
-
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி இன்று போகி பண்டிகையில் பழைய குப்பைகளை எாிக்கும் போது மத்திய அரசின் 3−வேளாண் வி...
-
திருச்சி BHEL - CITU தொழிலாளர்கள் வீடுகளிலிருந்து எதிர்ப்பு பதாகை ஏந்தி உழைப்பாளர் தினத்தில் உரிமை மீட்பு போராட்டம் இந்தியா முழுவதும...
-
பல நூறு கோடிகளுக்கு காசோலை நிலைதடுமாறிய நிதி நிறுவனம் மக்களின் நிலை என்ன? தமிழகத்தில் தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் பல ஊர்களில...
-
திருப்பூர் வடக்கு போலீசாருக்கு திருப்பூர் பி.என்.ரோடு எஸ்.வி.காலனி 2–வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதாக தகவ...
-
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் கடந்த 20 நாட்களாக சுற்றித்திரியும் ஒற்றை குரங்கு பார்ப்போரையும் பள்ளி மற்றும் கல்ல...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...

0 comments:
Post a Comment