Wednesday, November 12, 2014
துரை நகரில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ரத்தப்
பரிசோதனையில், 1000 பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பிருந்தது
தெரியவந்துள்ளது. இத்தகவலை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய் சிகிச்சைப்
பிரிவு துறைத் தலைவர் டாக்டர் கே.செந்தில் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வரும் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலக சர்க்கரை நோய் தினமாகும். நம்நாட்டில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அதிலும் தமிழகம் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.
1990 ஆம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுக்கப்பட்டனர். அப்போது 2025 ஆம் ஆண்டில் எவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இருப்பர் என தோராயமாக குறிப்பிட்டனர். ஆனால், நடப்பாண்டிலேயே அந்த எண்ணிக்கையுள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் தொற்றாநோய் சிகிச்சைத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேரை ரத்தப் பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளோம். அதில் 1000 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது புதிதாக கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 15 சதவிகித சர்க்கரை நோயாளிகள் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது அடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வருவது சகஜமாகிவிட்டது.
பழைய சாதம், இட்லி, தோசை என உணவுகளை மோர், நீராகாரம், சட்டினி, சாம்பார் என அனைத்திலும் ஊறவைத்து சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு அடித்தளமாவது தெரியவந்துள்ளது.
அரைகுறையாக வெந்த சாதத்தை கீரை உள்ளிட்டவற்றுடன் சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
நடைப் பயிற்சி முக்கியம். ஆனால், வீடு வாசல் வரை வாகனத்தில் வந்திறங்கும் வசதி கூடியுள்ளதால் பெண்கள் கூட சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் வியர்வை சிந்த நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.
பரிசோதனைக்கு வாய்ப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி காலை இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில் பரிசோதனையுடன், நோய் பாதிப்புடையோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவில் கூறப்பட்டது
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: வரும் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உலக சர்க்கரை நோய் தினமாகும். நம்நாட்டில்தான் சர்க்கரை நோயாளிகள் அதிகம். அதிலும் தமிழகம் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது.
1990 ஆம் ஆண்டில் சர்க்கரை நோயாளிகள் கணக்கெடுக்கப்பட்டனர். அப்போது 2025 ஆம் ஆண்டில் எவ்வளவு சர்க்கரை நோயாளிகள் இருப்பர் என தோராயமாக குறிப்பிட்டனர். ஆனால், நடப்பாண்டிலேயே அந்த எண்ணிக்கையுள்ள சர்க்கரை நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தமிழக அரசின் தொற்றாநோய் சிகிச்சைத் திட்டத்தில் கடந்த ஓராண்டில் 10 ஆயிரம் பேரை ரத்தப் பரிசோதனைக்கு உள்படுத்தியுள்ளோம். அதில் 1000 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது புதிதாக கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 15 சதவிகித சர்க்கரை நோயாளிகள் 40 வயதுக்கு உள்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 30 வயது அடைந்தவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு வருவது சகஜமாகிவிட்டது.
பழைய சாதம், இட்லி, தோசை என உணவுகளை மோர், நீராகாரம், சட்டினி, சாம்பார் என அனைத்திலும் ஊறவைத்து சாப்பிடுவதாலும் சர்க்கரை நோய் பாதிப்புக்கு அடித்தளமாவது தெரியவந்துள்ளது.
அரைகுறையாக வெந்த சாதத்தை கீரை உள்ளிட்டவற்றுடன் சாப்பிடுவோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு குறைவாகவே உள்ளது.
நடைப் பயிற்சி முக்கியம். ஆனால், வீடு வாசல் வரை வாகனத்தில் வந்திறங்கும் வசதி கூடியுள்ளதால் பெண்கள் கூட சர்க்கரை நோய் பாதிப்புக்குள்ளாகிவிடுகின்றனர். ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் வியர்வை சிந்த நடைப்பயிற்சி மேற்கொள்ளவேண்டியது அவசியம் என்றார்.
பரிசோதனைக்கு வாய்ப்பு: மதுரை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு வரும் 14-ம் தேதி காலை இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.
இதில் பரிசோதனையுடன், நோய் பாதிப்புடையோருக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்க்கரை நோய் சிகிச்சைப் பிரிவில் கூறப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 41 வார்டு கிராப்பட்டி லிட்டில் ப்ளார் பள்ளி மைதானத்தில் விலையில்லா மிக்...
-
ஈரோட்டை அடுத்த ஈஞ்சம்பள்ளி அருகே உளள பூசாரி பாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் கமலா (வயது 19) பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இவர் கோவையில் உள்ள ...
-
சம்பளம், போதிய உணவு, இருப்பிடம் கொடுக்க மறுப்பதாக கம்பெனி நிர்வாகம் மீது வட மாநிலத் தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார்.. திரு...
-
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற...
-
மதுரை சக்தி ஆட்டோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் டாடா ஜஸ்ட் புதிய காரினை துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா அறிமுகப்படுத்தினார் .ஆர்...
-
மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3–வது பஸ் ஸ்டாப் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். 6–வது வார்டு அ.தி.மு.க. செயலாளரான இவர் அதே ப...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
மதுரை மாவட்டம் சின்ன பூலாம்பட்டியை சேர்ந்த மீனா திருமங்கலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 12–ந்தேதி கல்லூரி விட்டு வீட்ட...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
0 comments:
Post a Comment