Thursday, November 27, 2014
திருப்பூர் பல்லடம் ரோடு பகுதியில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறிய தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் காவலாளியாக ராமசாமி(வயது 65) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அந்த மருத்துவமனையின் பின் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி சித்ராவுடன் (55) தங்கியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராமசாமி, நேற்று காலை வீட்டில் தனக்கு தானே தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை காப்பாற்றி, அவர் வேலை செய்யும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், இவருக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி கூறியதாக தெரிகிறது.
இதனால் அவருடைய உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைக்க 108 எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, மறுமுனையில் இருந்தவர்கள், தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சை அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை சமரசப்படுத்தி, ராமசாமியை சரக்கு ஆட்டோவின் பின்புறம் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே ராமசாமியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, தாராபுரம் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி வளாகம் அருகே டீக்கடை முன் மூன்று 108 ஆம்புலன்சுகள் டிரைவர் இன்றி நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ராமசாமியின் உறவினர்களும், பொதுமக்களும் மனிதநேயம் எங்கே சென்றது என்று வேதனை அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...

0 comments:
Post a Comment