Thursday, November 27, 2014
திருப்பூர் பல்லடம் ரோடு பகுதியில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறிய தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் காவலாளியாக ராமசாமி(வயது 65) என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் அந்த மருத்துவமனையின் பின் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனது மனைவி சித்ராவுடன் (55) தங்கியுள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராமசாமி, நேற்று காலை வீட்டில் தனக்கு தானே தூக்குப்போட்டுக்கொண்டார். உடனே அக்கம், பக்கத்தினர் அவரை காப்பாற்றி, அவர் வேலை செய்யும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம், இவருக்கு இங்கு சிகிச்சை அளிக்க முடியாது. அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் படி கூறியதாக தெரிகிறது.
இதனால் அவருடைய உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைக்க 108 எண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது, மறுமுனையில் இருந்தவர்கள், தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சை அனுப்ப முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவர்களை சமரசப்படுத்தி, ராமசாமியை சரக்கு ஆட்டோவின் பின்புறம் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே ராமசாமியை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, தாராபுரம் ரோட்டில் அரசு ஆஸ்பத்திரி வளாகம் அருகே டீக்கடை முன் மூன்று 108 ஆம்புலன்சுகள் டிரைவர் இன்றி நின்று கொண்டு இருந்தன. இதை பார்த்த ராமசாமியின் உறவினர்களும், பொதுமக்களும் மனிதநேயம் எங்கே சென்றது என்று வேதனை அடைந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment