Thursday, November 27, 2014
திருப்பூர் மாநகர ம.தி.மு.க. சார்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் விழா டவுன்ஹால் அருகில் உள்ள விநாயகர் கோவில் முன் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர செயலாளர் சிவபாலன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி, துணை செயலாளர் வக்கீல் தமயந்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர். எம்.எல்.எப். பனியன் சங்க செயலாளர் முத்துகுமாரசாமி, நெசவாளர் அணி செயலாளர் சுப்பிரமணியம், வக்கீல் அணி செயலாளர் கந்தசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ரத்தினசாமி, கவுன்சிலர் கல்யாணி உள்பட 20 பேர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் தயார் செய்யப்பட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து கோவில் முன் மேஜையில் வைத்து இருந்தனர். நிகழ்ச்சி தொடங்கும் முன், அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கக்கூடாது என்று ம.தி.மு.க.வினரிடம் கூறினார்கள். அத்துடன் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் இருந்த பாத்திரத்தை போலீசார் பறிக்க முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் போலீஸ் தடையை மீறி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கலை வழங்கினார்கள். உடனே போலீசார் ம.தி.மு.க.வினர் 20 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதனால் கோவில் முன் கேட்பாரற்று இருந்த சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை பொதுமக்கள் தாங்களாகவே இலையில் எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினார்கள். இதை பார்த்த போலீசார் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை பாத்திரத்துடன் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பூர் நேரு வீதியில் உள்ள காவேரி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையொட்டி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் தயார் செய்யப்பட்டு பெரிய பாத்திரத்தில் வைத்து கோவில் முன் மேஜையில் வைத்து இருந்தனர். நிகழ்ச்சி தொடங்கும் முன், அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கக்கூடாது என்று ம.தி.மு.க.வினரிடம் கூறினார்கள். அத்துடன் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் இருந்த பாத்திரத்தை போலீசார் பறிக்க முயன்றனர்.
இதனால் போலீசாருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதைத்தொடர்ந்து ம.தி.மு.க.வினர் போலீஸ் தடையை மீறி பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், வெண்பொங்கலை வழங்கினார்கள். உடனே போலீசார் ம.தி.மு.க.வினர் 20 பேரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள்.
இதனால் கோவில் முன் கேட்பாரற்று இருந்த சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை பொதுமக்கள் தாங்களாகவே இலையில் எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினார்கள். இதை பார்த்த போலீசார் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் ஆகியவற்றை பாத்திரத்துடன் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருப்பூர் நேரு வீதியில் உள்ள காவேரி அம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தேசியக்கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை நடத்திய தமிழிலக்கியங்களில் அறம் என்...
-
திருப்பூர் 22வது வார்டு இடைத்தேர்தலில் 4 வேட்பாளர்களும். 45வது வார்டில் 10 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இரு வார்டிலும் சேர்ந்...
-
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்...
-
மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் மதுரை தல்லாகுளத்தில் உள்ள பி.டி.ஆர். திருமண மகாலில் நேற்று மாலை நடந்தது. மதுரை ம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
ஊராட்சி செயலாளர்களுக்கு இளநிலை உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அ...
-
மதுரை: மக்களின் முதல்வர் ஜெயலலிதா என்பதற்கு மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் புது விளக்கம் அளித்தார்.முல்லை ...
-
அகஸ்தியர் அருவி பகுதியில் மறைவிடத்தில் இளம்பெண்ணுடன் சிக்கிய போலீஸ்காரரை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பாபநாசம் அகஸ்தியர் அரு...
-
அரசு அனுமதியளித்த பின்னர், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமையில் விசாரணை துவக்கப்படும் என, மத...
-
திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகில் பாமக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றத்து அதில் பாமக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண...

0 comments:
Post a Comment